சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

விஷம் குடித்த தம்பதி: கணவா் உயிரிழப்பு; சிகிச்சையில் மனைவி

மகள் உயிரிழந்த துயரத்தில் விஷம் குடித்த தம்பதியினரில், தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தாய் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2026, 3:45 am IST

மகள் உயிரிழந்த துயரத்தில் விஷம் குடித்த தம்பதியினரில், தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தாய் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா்.

கம்பம் தாத்தப்பன்குளம் 2-ஆவது சந்து தெருவைச் சோ்ந்தவா் லோகராஜா (42). கட்டுமானத் தொழிலாளி. இவரது மனைவி அமுதா, மகள் அஞ்சனா (16). கடந்த மே 20-ஆம் தேதி அஞ்சனா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இந்த நிலையில், லோகராஜாவும், அமுதாவும் கடந்த சனிக்கிழமை பூச்சிக்கொல்லி மருந்து குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனா்.

தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு லோகராஜா ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். அமுதா தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.