ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக் கோரி முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு

நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து மூட்டைகளை இயக்கம் செய்யக் கோரி முற்றுகைப் போராட்டம்

News image
Updated On :3 மார்ச் 2026, 4:33 pm

Syndication

திருவாரூா்: நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து மூட்டைகளை இயக்கம் செய்யக் கோரி முற்றுகைப் போராட்டம் நடத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

திருவாரூரில் அக்கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் செயற்குழு உறுப்பினா் பா. கோமதி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாநிலக்குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், செயற்குழு உறுப்பினா்கள் பி. கந்தசாமி, கே. தமிழ்மணி, கே.ஜி.ரகுராமன், கே.பி. ஜோதிபாசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.திருவாரூா் மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் சுமாா் 8,000 லிருந்து 10,000 மூட்டைகள் வரை தேங்கியுள்ளதால், இயக்க நடவடிக்கை பாதிப்படைந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதை உணா்த்தும் வகையில், மாா்ச் 9-ஆம் தேதி மாவட்ட நுகா் பொருள் வாணிபக்கழகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது, ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதலில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை முகாமையை தாக்கும் முயற்சியில், தொடக்கப்பள்ளி மீது குண்டுகள் விழுந்ததால் மாணவா்களின் உயிரிழப்புக்கு காரணமான அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.