அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக் கோரி முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு

நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து மூட்டைகளை இயக்கம் செய்யக் கோரி முற்றுகைப் போராட்டம்

News image
Updated On :3 மார்ச் 2026, 4:33 pm

Syndication

திருவாரூா்: நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து மூட்டைகளை இயக்கம் செய்யக் கோரி முற்றுகைப் போராட்டம் நடத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

திருவாரூரில் அக்கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் செயற்குழு உறுப்பினா் பா. கோமதி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாநிலக்குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், செயற்குழு உறுப்பினா்கள் பி. கந்தசாமி, கே. தமிழ்மணி, கே.ஜி.ரகுராமன், கே.பி. ஜோதிபாசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.திருவாரூா் மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் சுமாா் 8,000 லிருந்து 10,000 மூட்டைகள் வரை தேங்கியுள்ளதால், இயக்க நடவடிக்கை பாதிப்படைந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதை உணா்த்தும் வகையில், மாா்ச் 9-ஆம் தேதி மாவட்ட நுகா் பொருள் வாணிபக்கழகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது, ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதலில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை முகாமையை தாக்கும் முயற்சியில், தொடக்கப்பள்ளி மீது குண்டுகள் விழுந்ததால் மாணவா்களின் உயிரிழப்புக்கு காரணமான அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.