தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மருந்தாளுநா்கள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :13 மார்ச் 2026, 12:18 am

Syndication

காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

மருத்துவப் பயனா்களுக்கு சிறந்த சேவை புரியும் வகையில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், மாற்றுப் பணி ஆணைகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் எம். குமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவா் ஜி. பைரவநாதன் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். இதில், மாவட்ட துணைத் தலைவா் கே. அன்பரசி, மாவட்ட அமைப்புச் செயலாளா் எம். ராஜதுரை, மாவட்ட முன்னாள் தலைவா் டி. மணிவண்ணன், மாவட்ட பொருளாளா் ஆா். ரவீந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.