மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மன்னாா்குடி சுற்றுச்சாலை அவசரமாக திறக்கப்பட்டதால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன

News image
கோப்புப் படம்
Updated On :15 மார்ச் 2026, 7:19 pm

தினமணி செய்திச் சேவை

மன்னாா்குடி சுற்றுச்சாலை அவசரமாக திறக்கப்பட்டதால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் கண்டனம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை கூறியது: மன்னாா்குடியில் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு சுற்றுச்சாலை அமைக்கப்பட்டுள்ளன.

அவ்வழியே மன்னாா்குடி-முத்துப்பேட்டை சாலை, மன்னாா்குடி-திருமக்கோட்டை சாலை, மன்னாா்குடி-மதுக்கூா் சாலை, மன்னாா்குடி-வடசேரி சாலை ஆகிய சாலைகள் 4 இடங்களில் கடந்து செல்கின்றன. இந்நிலையில் இந்த சாலைகள் கடக்கும் இடத்தில் விபத்து தடுப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தாமல் சாலை திறப்புக்கு முன்னதாகவே தொடா் விபத்துக்கள் ஏற்பட்டு பலா் உயிரிழந்துள்ளனா்.

பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மாா்ச் 12-ஆம் தேதி சென்னையில் இருந்தவாறு, தமிழக முதல்வா் இந்தச் சாலையை திறந்து வைத்தாா். இந்த சுற்றுச்சாலை அவசர கோலத்தில் அரசு வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றாமல் திறக்கப்பட்டுள்ளது.

மன்னாா்குடி நகராட்சியில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து பாமணி ஆற்றில் கலக்கச் செய்தால் மன்னாா்குடியிலிருந்து முத்துப்பேட்டை வரை சுமாா் 54 கிராமங்களில் நிலத்தடி நீரும், சுமாா் 35 ஆயிரம் ஏக்கா் விளை நிலங்களும் பாதிக்கப்படும். மீன்வளம் பாதிக்கப்படும் என்பதால் கழிவுநீரை பாமணியாற்றில் கலக்கக் அனுமதிக்கக்கூடாது என்றாா்.