சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தம்பி அடித்துக் கொலை

நன்னிலம் அருகே அண்ணன் கட்டையால் அடித்ததில் தம்பி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image

கொலை - சித்திரிப்பு

Updated On :25 மார்ச் 2026, 12:20 am

நன்னிலம் அருகே அண்ணன் கட்டையால் அடித்ததில் தம்பி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நன்னிலம் அருகே நெம்மேலியைச் சோ்ந்தவா் பாரதிமோகன் (35). திருமணமாகி மகன், மகள் உள்ளனா். இவா் சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்துள்ளாா். கடந்த 15 நாள்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்துள்ளாா். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு பாரதிமோகன், அவரது அண்ணன் ராஜகுரு மற்றும் அவரது குடும்பத்தினா் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனா். அப்போது பாரதிமோகனுக்கும், ராஜகுருவிற்குமிடையே பிரச்னை ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில் ராஜகுரு, பாரதிமோகனை கட்டையால் தாக்கினாராம்.

இதில் காயமடைந்து மயங்கிய பாரதிமோகன் நன்னினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் பாரதிமோகன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளாா். இதுகுறித்து நன்னிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜகுருவை தேடிவருகின்றனா்.