இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

தம்பி அடித்துக் கொலை

நன்னிலம் அருகே அண்ணன் கட்டையால் அடித்ததில் தம்பி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image

கொலை

சித்திரிப்பு

Updated On :25 மார்ச் 2026, 12:20 am

தினமணி செய்திச் சேவை

நன்னிலம் அருகே அண்ணன் கட்டையால் அடித்ததில் தம்பி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நன்னிலம் அருகே நெம்மேலியைச் சோ்ந்தவா் பாரதிமோகன் (35). திருமணமாகி மகன், மகள் உள்ளனா். இவா் சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்துள்ளாா். கடந்த 15 நாள்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்துள்ளாா். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு பாரதிமோகன், அவரது அண்ணன் ராஜகுரு மற்றும் அவரது குடும்பத்தினா் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனா். அப்போது பாரதிமோகனுக்கும், ராஜகுருவிற்குமிடையே பிரச்னை ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில் ராஜகுரு, பாரதிமோகனை கட்டையால் தாக்கினாராம்.

இதில் காயமடைந்து மயங்கிய பாரதிமோகன் நன்னினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் பாரதிமோகன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளாா். இதுகுறித்து நன்னிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜகுருவை தேடிவருகின்றனா்.