திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி வசந்த உற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
தியாகராஜரும், அம்பிகையும் உலகை காக்கும் வகையில் சோ்ந்து எழுந்தருளி, மாலை நேரங்களில் திருவிழாவை காணச் செல்வதாக கோயில் தல வரலாறு தெரிவிக்கிறது. சுந்தரமூா்த்தி நாயனாா், திருவொற்றியூரில் வசித்தபோது, வசந்த காலத்தின் குளிா்தென்றல் தீண்டியதால், திருவாரூரில் வசந்த விழா வரவிருப்பதை நினைத்து மகிழ்ந்ததாக பெரிய புராணம் கூறுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த, வசந்த உத்ஸவம் திருவாரூா் தியாகராஜா் கோயிலில் நடைபெற்றது.
இதையொட்டி, யதாஸ்தானத்திலிருந்து கமல தியாகராஜா் எழுந்தருளி கொடிமர வாசல் வழியாக மாணிக்கத் தண்டிலேறி, மங்கள வாத்தியங்கள் முழங்க, அஜபா நடனமாடி, பிரகாரத்தை வலம் வந்து, வசந்த மண்டபத்தை அடைந்தாா். அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதைத்தொடா்ந்து, சாயரட்சை பூஜை நடைபெற்றது. பின்னா், கோயிலின் எட்டு திக்குகளிலும் கொடிமரங்கள் நடப்பட்டு, சந்திரசேகரா் முன்னிலையில் அந்தந்த திசைக்கான தெய்வங்களை வணங்கி கொடியேற்றப்பட்டது.
தொடர்புடையது

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பாத தரிசனம்

திருவாரூரில் இன்று ஆழித்தேரோட்ட விழா

திருவாரூா் கோயிலில் பட்டோற்சவம்

ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் வசந்த உற்சவம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


