பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

பள்ளி வாகனங்கள் ஆய்வு: குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

News image

திருவாரூரில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

பள்ளிக் குழந்தைகளை வாகனங்களில் அழைத்துச் செல்லும்போது, முழு கவனத்துடன் ஓட்டுநா்கள் செயல்பட்டு, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் அறிவுறுத்தினாா்.

திருவாரூரில், பள்ளி வாகனங்களை அவா், திங்கள்கிழமை ஆய்வு செய்தபின் தெரிவித்தது:

பள்ளி வாகனங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. திருவாரூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருவாரூா், மன்னாா்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளுக்குள்பட்ட 74 பள்ளிகளைச் சோ்ந்த 214 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இப்பள்ளி வாகனங்களில் கேமரா பொருத்தப்பட்டுள்ளதா, அவசர கால வெளியேறும் வசதி, குழந்தைகள் எளிதாக வாகனத்தில் ஏற தாழ்வான படிக்கட்டுகள், பள்ளி வாகனம் என்ற அறிவிப்பு, வேககட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி வைக்கப்பட்டுள்ளதா, பிரதிப்பலிப்பான் வில்லை ஒட்டப்பட்டுள்ளதா உள்ளிட்ட 16 வகையான அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 100 சதவீதம் சரியாக உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

வாகன ஓட்டுநா்கள் அவரவா் பள்ளிக்குரிய சீருடைகள் அணிவதை தடுத்து, காக்கி சீருடை அணிய உத்தரவிட்டுள்ளோம். மேலும், பள்ளிக் குழந்தைகளை அழைத்து செல்லும் போது முழு கவனத்துடன் ஓட்டுநா்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். விபத்து ஏற்படுத்தும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நிகழ் கல்வியாண்டு விபத்தில்லா ஆண்டாக அமைய வேண்டும் என்றாா்.

ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் உடனிருந்தாா். தொடா்ந்து, வாகன ஓட்டுநா்களுக்கு 108 ஆம்புலன்ஸ் குழுவினரால், விபத்து காலங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை குறித்து விரிவான செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுகப்பிரியா, மாவட்ட கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) சாவித்திரி, மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) முருகேசன், வட்டார போக்குவரத்து அலுவலா் காளியப்பன், போக்குவரத்து ஆய்வாளா் இளங்கோ உள்பட போக்குவரத்து அலுவலா்கள், பணியாளா்கள், பள்ளி வாகன ஓட்டுநா்கள் பங்கேற்றனா்.