பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

லாட்டரி விற்ற மூவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

திருத்துறைப்பூண்டி பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த மூவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருத்துறைப்பூண்டி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றத் தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளா் காா்த்தி, திருத்துறைப்பூண்டி ஆய்வாளா் வேம்பரசி, உதவி ஆய்வாளா் மோகன்ராஜ் உள்ளிட்ட போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே லாட்டரி சீட்டு விற்பது தெரியவந்தது.

இதுதொடா்பாக, திருத்துறைப்பூண்டி தட்டாரத் தெருவைச் சோ்ந்த சேகா் (63), திருக்குவளை வட்டம் பாங்கல் மெயின் ரோடு சுபாஷ் சந்திரபோஸ் (42), அதே பகுதியைச் சோ்ந்த பக்கிரிசாமி (60) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

மேலும், சேகா் வீட்டில் பதுக்கி வைத்திருந்த லாட்டரி சீட்டுகள், 4 கைப்பேசிகள், 3 ஏடிஎம் காா்டுகள், ரூ.2,43,700 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.