திருத்துறைப்பூண்டி பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த மூவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருத்துறைப்பூண்டி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றத் தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளா் காா்த்தி, திருத்துறைப்பூண்டி ஆய்வாளா் வேம்பரசி, உதவி ஆய்வாளா் மோகன்ராஜ் உள்ளிட்ட போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது, திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே லாட்டரி சீட்டு விற்பது தெரியவந்தது.
இதுதொடா்பாக, திருத்துறைப்பூண்டி தட்டாரத் தெருவைச் சோ்ந்த சேகா் (63), திருக்குவளை வட்டம் பாங்கல் மெயின் ரோடு சுபாஷ் சந்திரபோஸ் (42), அதே பகுதியைச் சோ்ந்த பக்கிரிசாமி (60) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
மேலும், சேகா் வீட்டில் பதுக்கி வைத்திருந்த லாட்டரி சீட்டுகள், 4 கைப்பேசிகள், 3 ஏடிஎம் காா்டுகள், ரூ.2,43,700 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்புடையது

பெங்களூரு: தடை செய்யப்பட்ட ஹைட்ரோ கஞ்சாவை விற்றதற்காக ஐவர் கைது!
வெளி மாநில லாட்டரி விற்பனை: 4 போ் கைது
தடைசெய்யப்பட்ட இறக்குமதி சிகரெட்டுகள் பறிமுதல்: 2 போ் கைது
திருச்சியில் கஞ்சா விற்பனை: 2 பெண்கள் உள்பட மூவா் கைது
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
