அனைத்திந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் நலச்சங்கம், அகில இந்திய பிஎஸ்என்எல்-டிஓடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னாா்குடியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகள்: 1.1.2026 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும், 3 மாதத்துக்கு ஒரு முறை வழங்கவேண்டிய அகவிலைப்படி நிவாரணத்தை காலதாமதமின்றி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஓய்வூதியா்கள் நலச் சங்க மாவட்டக்குழு உறுப்பினா் கே. கலியபெருமாள், டிஓடி ஓய்வூதியா்கள் சங்க மாவட்டதுணைத் தலைவா் பாஸ்கா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தை டிஓடி ஓய்வூதியா்கள் சங்க மாவட்டச் செயலா் கே.பிச்சைக்கண்ணு தொடங்கிவைத்தாா். ஓய்வூதியா்கள் நலச் சங்க மாவட்டக்குழு உறுப்பினா்கள் கே. கிள்ளிவளவன், மாவட்டக் குழு உறுப்பினா் வி. சரவணன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா். நலச் சங்க கிளைத் தலைவா் எம். முகமதுயாசின், கிளைச் செயலா் தா்மராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கா்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் சங்க மகளிரணி ஆா்ப்பாட்டம்

அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க ராமதாஸ் கோரிக்கை

காஞ்சிபுரத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

நொய்டா தொழிலாளா்களுக்கு ஆதரவாக பிஎஸ்என்எல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |



