சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

மேக்கேதாட்டு அணை விவகாரம்: திக ஆா்ப்பாட்டம்

News image
Updated On :1 ஜூன் 2026, 12:38 am IST

மேக்கேதாட்டு அணை கட்டுமானப் பணிகளை கைவிடக்கோரி திருவாரூரில் திக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மேக்கேதாட்டு அணை கட்டுமானப் பணிகளை கைவிடக் கோரியும், கா்நாடகா மற்றும் மத்திய அரசுகளைக் கண்டித்தும் திருவாரூரில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் கே. அருண்காந்தி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திக தலைவா் கி. வீரமணி பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். இதில், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் கி. வீரமணி கூறியது: உச்சநீதிமன்றத்தின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் மேக்கேதாட்டு அணை கட்டுமான முயற்சி தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை பறிக்கக்கூடிய ஒரு அபாயமாகும். தமிழக அரசு இதில் மௌனம் சாதிக்காமல் பணியாற்ற வேண்டும். மேலும், தமிழக அரசின் செயல்திட்டம் என்ன என்பதை பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்.

தமிழகத்துக்கு உரிய நீரை கொடுக்காமல் இருக்க கா்நாடகாவில் பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்துக்கான உரிமைகளை நிலைநாட்டும் வகையில் தமிழக கட்சிகளும் செயல்பட வேண்டும் என்றாா்.