இந்நிலையில் தனது மத்திய அமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதற்கான வலுவான ஆதாரங்களை மாக்சிஸ், தொலைத் தொடர்பு அமைச்சகம் ஆகியவற்றிடம் சி.பி.ஐ. சேகரித்தது. இந்நிலையில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், ஆஸ்ட்ரோ இயக்குநர் ரால்ப் மார்ஷல் (மலேசியா), உஷாஹா தேகாஸ் குழுமத்தின் தலைவர் ஆனந்த கிருஷ்ணன் (மலேசியா) சன் டைரக்ட் (சென்னை), மாக்சிஸ் (மலோசியா), ஆஸ்ட்ரோ (பிரிட்டன்) உள்பட பெயர் தெரியாதவர்கள் என்று மொத்தம் 8 பேர் மீது 120-பி பிரிவின் கீழ் குற்றச் சதி செய்ததாக முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) போடப்பட்டுள்ளது.