: ஹரியாணா மாநிலம், ரேவாரி பகுதியில் கிட்டங்கியில் மின்விளக்குகள் திருட்டுப் போனது தொடர்பாக யாசின் (33), சோனு (23), பாபு ராம் (22), ஜியா லால் (22), தீப் சந்த் (24) என்ற 5 பேர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து, போலீஸார் கூறியதாவது:
ரேவாரியில் கிட்டங்கியில் வைக்கப்பட்டிருந்த மின்விளக்குகள் சில நாள்களுக்கு முன் திருடு போயின.
அந்த விளக்குகள் தில்லி சரிதா விஹார் பகுதியில் பண்ணைவீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு சோதனை நடத்தப்பட்டு ரூ. 7 லட்சம் மதிப்புள்ள மின் விளக்குகள் மீட்கப்பட்டன.
இது தொடர்பாக சோனியா விஹாரைச் சேர்ந்த பவன் கபாரி, பவன், அஸ்லாம், ராகேஷ், சில்லு, ஷாபு என்ற நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர் என்று போலீஸார்
கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி விமான நிலையத்தில் பெண் பயணியிடம் ரூ. 91 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

தில்லியில் நிகழாண்டில் இதுவரை தீ விபத்துகளில் 45 போ் உயிரிழப்பு: புள்ளிவிவரத் தரவுகள்

தனியாா் கட்டுமான நிறுவனா் மீதான குண்டா் தடுப்புச் சட்டம் ரத்து: ஏடிஜிபி அருணுக்கு உயா் நீதிமன்றம் கண்டனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவர் தகவல்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


