தில்லி விமான நிலையத்தில் 10 கிலோ தங்கம் கடத்தியதாக சீன நாட்டைச் சேர்ந்த 4 பேரை சுங்கத் துறையினர் கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சுங்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தாய்வானில் இருந்து ஹாங்காங் வழியாக தில்லிக்கு சனிக்கிழமை வந்த சீனாவைச் சேர்ந்த 4 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது.
அதில், தங்கக்கட்டிகளை காகிதங்களில் சுற்றி, தங்கள் உடையில் மறைத்து வைத்திருந்ததை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பின்னர் 4 சீனர்களும் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 3 கோடியாகும்' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ரியாதில் இருந்து தில்லிக்கு வந்த 3 இந்தியர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 700 கிராம் தங்கத்தை சிறுசிறு துகள்களாகவும், 350 கிராம் தங்கம் கட்டியாகவும் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 1.05 கிலோ எடையுள்ள இந்த தங்கத்தின் மதிப்பு ரூ. 31.56 லட்சம் இருக்கும் என்றும் இந்தத் தங்கத்தை கொண்டு வந்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.