ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குருகிராம் பள்ளி மாணவர் கொலை வழக்கில் தாக்கலான குற்றப்பத்திரிகையை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிமன்றம்

தேசியத் தலைநகர் வலயம் குருகிராமில் தனியார் பள்ளியில் 7 வயது மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 16 வயது மாணவருக்கு எதிராக மத்திய

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 7:31 pm

DIN

தேசியத் தலைநகர் வலயம் குருகிராமில் தனியார் பள்ளியில் 7 வயது மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 16 வயது மாணவருக்கு எதிராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை குருகிராம் நீதிமன்றம் திங்கள்கிழமை கவனத்தில் எடுத்துக்கொண்டது.
குருகிராமின் போண்ட்ஸி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்த ஏழு வயது மாணவர் பள்ளியின் கழிப்பறைக்குகள் கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை முதலில் விசாரித்த குருகிராம் காவல் துறையினர், பள்ளிப் பேருந்தில் உதவியாளராக இருந்த அசோக் குமார் என்பவரைக் கைது செய்தனர். இதனிடையே, இறந்த மாணவனின் பெற்றோர் விடுத்த கோரிக்கையை ஏற்று, கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றி ஹரியணா முதல்வர் மனோகர் லால் கட்டர் உத்தரவிட்டார். 
இந்நிலையில், அதே பள்ளியில் படித்த 11-ஆம் வகுப்பு மாணவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். தேர்வுகள் தள்ளிப் போக வேண்டும் என்ற நோக்கில் சிறுவனை சம்பந்தப்பட்ட மாணவர் கொலை செய்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
மேலும், ஏற்கெனவே கைதான அசோக் குமாருக்கு எதிரான எந்த ஆதாரங்களும் இல்லை என்பதால் வழக்கில் இருந்து அவரை விடுவிக்கவும் போலீஸ் தரப்பில் கோரப்பட்டது.
இதனிடையே, ஜாமீன் கோரி குற்றம்சாட்டப்பட்ட 16 வயது மாணவர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை நீதிமன்றம் கடந்த ஜனவரி 8-ஆம் தேதி நிராகரித்தது. அத்துடன், மனுவை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக கூறி ரூ.21 ஆயிரம் அபராதமாக செலுத்தவும் மாணவரின் தந்தைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 
இதனிடையே, 16 வயதாகும் அந்த மாணவரை சிறுவனாக அல்லாமல் இளைஞராக கருதி விசாரணை நடத்த வேண்டும் என்று சிறார் நீதி ஆணையம் கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து மாணவரின் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனு மீதான இரு தரப்பு விசாரணை பிப்ரவரி 17-ஆம் தேதி நடைபெற உள்ளது.
குருகிராம் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் சிபிஐ போலீஸார் கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், செப்டம்பர் 8-ஆம் தேதி நிகழ்ந்த கொலையில் 16 வயது மாணவருக்கு தொடர்பு இருப்பதற்கான போதிய ஆதாரங்கள் இருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றம்சாட்டப்பட்ட 16 வயது மாணவரின் பெயரை ஊடகங்களில் வெளியிட தடை விதித்திருந்த நீதிமன்றம், கொலை செய்யப்பட்ட ஏழு வயது மாணவரின் பெயரை "பிரின்ஸ்' என்றும், குற்றம்சாட்டப்பட்ட சிறாரின் பெயரை "போலு' என்றும் சம்பந்தப்பட்ட பள்ளியை "வித்யாலயா' என்றும் பயன்படுத்துமாறு ஊடகங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை குருகிராம் நீதிமன்றம் திங்கள்கிழமை கவனத்தில் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. நீதிமன்ற அறையில் நடைபெற்ற விசாரணையின்போது , சிறுவனை கொலை செய்ததற்கான முகாந்திரம் இருப்பதற்கான போதிய ஆதாரங்கள் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிரான இறுதி அறிக்கையில் இருப்பதை கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஜஸ்பிர் சிங் குண்டு கவனத்தில் எடுத்துக்கொண்டதாக தகவலறிந்த நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. 
விசாரணையின்போது பாதிக்கப்பட்ட தந்தையின் சார்பில் வழக்குரைஞர் சுஷில் டேக்ரிவால் ஆஜரானார். நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு குற்றம்சாட்டப்பட்டவருக்கு குற்றப்பத்திரிகையின் நகலை சிபிஐ போலீஸார் வழங்கினர். தற்போது இந்த வழக்கின் குற்றப் பத்திரிகை மீதான விசாரணையை பிப்ரவரி 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அதுவரை குற்றம்சாட்டப்பட்டவரின் நீதிமன்றக் காவலையும் நீடித்து உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.