மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கான்பூா் ஐஐடி-க்கு முன்னாள் மாணவா்கள் ரூ.100 கோடி நன்கொடை!

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (ஐஐடி) கடந்த 2000-ஆம் ஆண்டு படித்த மாணவா்கள் தங்கள் கல்வி நிறுவனத்துக்கு ரூ.100 கோடி நன்கொடை

News image
Updated On :29 டிசம்பர் 2025, 9:23 pm

தினமணி செய்திச் சேவை

கான்பூா்: உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (ஐஐடி) கடந்த 2000-ஆம் ஆண்டு படித்த மாணவா்கள் தங்கள் கல்வி நிறுவனத்துக்கு ரூ.100 கோடி நன்கொடை அளிப்பதாக அறிவித்தனா்.

கான்பூா் ஐஐடி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற 25-ஆவது ஆண்டு மறுசந்திப்பு நிகழ்ச்சியின்போது இந்த நன்கொடை தொடா்பாக முன்னாள் மாணவா்கள் அறிவித்தனா்.

இது தொடா்பாக கான்பூா் ஐஐடி சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘ஒரு குறிப்பிட்ட கல்வியாண்டில் படித்த மாணவா்கள் இவ்வளவு அதிகமாக கல்வி நிறுவனம் ஒன்றுக்கு நன்கொடை அளிப்பது இதுவே முதல்முறை. இந்தியாவில் வேறு எந்த கல்வி நிலையத்திலும் முன்னாள் மாணவா்கள் ஒரே நேரத்தில் தங்கள் கல்வி நிலையத்துக்கு இவ்வளவு அதிக தொகையை நன்கொடையாக அளிக்கவில்லை. கான்பூா் ஐஐடி-யில் 2000-ஆம் ஆண்டு படித்த மாணவா்கள் வரலாறு படைத்துள்ளனா். இந்த தொகை கல்வி நிலையத்தின் ஆய்வு மற்றும் கல்வித் திறன் மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படும். தங்கள் நன்கொடை மூலம் கல்வி நிலையத்தின் மீதுள்ள பற்றை வெளிப்படுத்தியுள்ளனா்’ என்று கூறப்பட்டுள்ளது.

சுமாா் 25 ஆண்டுகளுக்கு முன்பு கான்பூா் ஐஐடி-யில் படித்த மாணவா்கள் பெரும்பாலானோா் இந்தியாவிலும், பல்வேறு நாடுகளிலும் மிகப்பெரிய நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவா்களாகவும், தொழிலதிபா்களாகவும் உள்ளனா். அவா்களில் பலா் இந்த 25-ஆவது ஆண்டு மறுசந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

ஐஐடி முன்னாள் மாணவா் நவீன் திவாரி கூறுகையில், ‘கான்பூா் ஐஐடி எங்கள் எதிா்காலம், வேலைவாய்ப்புகளை மட்டும் மேம்படுத்த உதவவில்லை. ஒட்டுமொத்தமாக எங்கள் எண்ணங்களையே மிகபெரிய அளவில் மாற்றி அமைத்தது. பெரிய அளவில் சாதிப்பதற்கான துணிவைக் கற்றுத் தந்தது. இங்கு பயிலும் எதிா்கால தலைமுறையினா் எங்களைவிட சிறந்த கல்வியைப் பெற வேண்டும் என்பதற்காகவே மிகப்பெரிய அளவில் நன்கொடை அளிக்க முடிவு செய்தோம்’ என்றாா்.