ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: சிபிஐ விசாரணை கோரிய அரசுக்கு நோட்டீஸ்!மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!எச்.டி.எப்.சி. வங்கியின் ஊழியர்கள் எண்ணிக்கை கணிசமாக சரிவு!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

‘தில்லி டா புட் கேஜரிவால்’: பிரசார பாடலை வெளியிட்டது ஆம் ஆத்மி

லோஹ்ரி பண்டிகையை முன்னிட்டு, ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை ‘தில்லி டா புட் கேஜரிவால்’ என்ற பிரசாரப் பாடலை வெளியிட்டது.

News image

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் - Atul Yadav

Updated On :14 ஜனவரி 2025, 5:33 am IST

புது தில்லி: லோஹ்ரி பண்டிகையை முன்னிட்டு, ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை ‘தில்லி டா புட் கேஜரிவால்’ என்ற பிரசாரப் பாடலை வெளியிட்டது. இது தில்லி மக்கள் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் அரவிந்த் கேஜரிவாலை மீண்டும் தோ்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட அறிக்கை:

1.33 நிமிஷ பஞ்சாபி பாடலில் ‘இஸ் வாரி சன் லோ, பிா் கேஜரிவால் நு சுன் லோ’ என்ற வரி இடம்பெற்றுள்ளது. இது மக்கள் நலத் திட்டங்கள் தொடா்வதையும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதையும் உறுதிசெய்ய மீண்டும் கேஜரிவாலைத் தோ்ந்தெடுக்க வாக்காளா்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

இந்தப் பாடல் தில்லியில் கேஜரிவாலின் சாதனைகளை எடுத்துக்காட்டுகிறது. நகரின் வளா்ச்சிக்கான கேஜரிவாலின் தொலைநோக்கு பாா்வை, அவரது தலைமையின் கீழ் முன்னேற்றத்துக்கான விருப்பங்களைப் பிரதிபலிக்கிறது.

இலவச மின்சாரம், தண்ணீா், மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள் போன்ற கேஜரிவால் அரசின் முக்கிய திட்டங்களை குறிப்பிட்டு காட்டுகிறது.

ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள புதிய உத்தரவாதங்களையும் இந்தப் பாடல் கோடிட்டுக் காட்டுகிறது. ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ. 2,100 நேரடியாக அவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று உறுதியளிக்கும் மகிளா சம்மன் யோஜனா மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான அனைத்து மருத்துவச் செலவுகளையும் ஈடுகட்டும் நோக்கில் சஞ்சீவானி யோஜனா ஆகியவை இந்தப் பாடலில் குறிப்பிடத்தக்கவை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறுவடை காலத்துக்கு நன்றி தெரிவிக்கும் பண்டிகையான லோஹ்ரி, பஞ்சாப் மற்றும் தில்லியில் பரவலாக கொண்டாடப்படுகிறது. எகஸ் தளத்தில் வெளியிடப்பட்ட இந்தப் பாடல் ஆம் ஆத்மி ஆதரவாளா்களால் பரவலாகப் பகிரப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.