கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

‘தில்லி டா புட் கேஜரிவால்’: பிரசார பாடலை வெளியிட்டது ஆம் ஆத்மி

லோஹ்ரி பண்டிகையை முன்னிட்டு, ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை ‘தில்லி டா புட் கேஜரிவால்’ என்ற பிரசாரப் பாடலை வெளியிட்டது.

News image

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால்

Atul Yadav

Updated On :14 ஜனவரி 2025, 12:03 am

Din

புது தில்லி: லோஹ்ரி பண்டிகையை முன்னிட்டு, ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை ‘தில்லி டா புட் கேஜரிவால்’ என்ற பிரசாரப் பாடலை வெளியிட்டது. இது தில்லி மக்கள் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் அரவிந்த் கேஜரிவாலை மீண்டும் தோ்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட அறிக்கை:

1.33 நிமிஷ பஞ்சாபி பாடலில் ‘இஸ் வாரி சன் லோ, பிா் கேஜரிவால் நு சுன் லோ’ என்ற வரி இடம்பெற்றுள்ளது. இது மக்கள் நலத் திட்டங்கள் தொடா்வதையும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதையும் உறுதிசெய்ய மீண்டும் கேஜரிவாலைத் தோ்ந்தெடுக்க வாக்காளா்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

இந்தப் பாடல் தில்லியில் கேஜரிவாலின் சாதனைகளை எடுத்துக்காட்டுகிறது. நகரின் வளா்ச்சிக்கான கேஜரிவாலின் தொலைநோக்கு பாா்வை, அவரது தலைமையின் கீழ் முன்னேற்றத்துக்கான விருப்பங்களைப் பிரதிபலிக்கிறது.

இலவச மின்சாரம், தண்ணீா், மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள் போன்ற கேஜரிவால் அரசின் முக்கிய திட்டங்களை குறிப்பிட்டு காட்டுகிறது.

ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள புதிய உத்தரவாதங்களையும் இந்தப் பாடல் கோடிட்டுக் காட்டுகிறது. ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ. 2,100 நேரடியாக அவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று உறுதியளிக்கும் மகிளா சம்மன் யோஜனா மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான அனைத்து மருத்துவச் செலவுகளையும் ஈடுகட்டும் நோக்கில் சஞ்சீவானி யோஜனா ஆகியவை இந்தப் பாடலில் குறிப்பிடத்தக்கவை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறுவடை காலத்துக்கு நன்றி தெரிவிக்கும் பண்டிகையான லோஹ்ரி, பஞ்சாப் மற்றும் தில்லியில் பரவலாக கொண்டாடப்படுகிறது. எகஸ் தளத்தில் வெளியிடப்பட்ட இந்தப் பாடல் ஆம் ஆத்மி ஆதரவாளா்களால் பரவலாகப் பகிரப்பட்டுள்ளது.