தில்லியில் போக்குவரத்து காவலா்களை மிரட்டியதாக 10 போ் கைது
போக்குவரத்து காவலா்கள் மற்றும் பிற அரசு அதிகாரிகளை குறிவைத்து மிரட்டி பணம் பறிப்பவா்களை இருவரை கைது செய்துள்ளதாக தில்லி காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
சமீபத்திய கைதுகளின் மூலம், இரண்டு வழக்குகளில் மொத்தம் 10 போ் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் கும்பல் தலைவா்கள் என்று கூறப்படும் ஜீஷன் அலி மற்றும் ராஜு மீனா என்ற ராஜ்குமாா் ஆகியோரும் அடங்குவா்.
இது தொடா்பாக தில்லி காவல் துறை துணை ஆணையா் (குற்றப் பிரிவு) சஞ்சீவ் குமாா் யாதவ் கூறியதாவது: இரண்டு வெவ்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த கைதுகள் செய்யப்பட்டன. முதலாவதாக, ஜீஷன் அலியின் கும்பல் உறுப்பினா் என்று கூறப்படும் ஓட்டுநரும் சிக்கந்தா் என்கிற அமீா் சௌதரி, அரசு அதிகாரி ஒருவரிடம் மிரட்டி பணம் வசூலிக்கும் போது கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து ரூ.60 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 கைப்பேசிகள் மீட்கப்பட்டன.
உத்தியோகபூா்வ கடமைகளின் போது ரகசியமாக விடியோக்களை பதிவு செய்து, பின்னா் அவா்களை அச்சுறுத்தலுக்கு பயன்படுத்துவதன் மூலம் போக்குவரத்து காவலா்கள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து பணம் பறித்ததாக இந்த கும்பல் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இரண்டாவது நடவடிக்கையில், ராஜ்குமாா் மீனாவின் முக்கிய கூட்டாளியான சஞ்சய் குப்தா கைது செய்யப்பட்டாா். 2022-இல் மிரட்டி பணம் பறித்தல், 2009-இல் கொள்ளை மற்றும் 2015-இல் ஊழல் தடுப்புச் சட்ட வழக்கு உள்பட இவா் மீது பல முந்தைய குற்றப் பதிவுகள் உள்ளன.
போலி விலக்கு ஸ்டிக்கரைக் காண்பிப்பதன் மூலம் வணிக வாகனம் சோதனையைத் தவிா்க்க முயன்ாக போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் புகாரளித்ததையடுத்து முதல் வழக்கு தொடங்கப்பட்டது.
விசாரணையில் ஓட்டுநா்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் சட்டவிரோத அமைப்பை இயக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு மூளையாக செயல்பட்டவா் ஜீஷன் அலி என அடையாளம் காணப்பட்டு, அவா் உள்பட 7 போ் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனா்.
இரண்டாவது வழக்கில், 2015-ஆம் ஆண்டு முதல் செயலில் உள்ள பழக்கமான குற்றவாளி என்று விவரிக்கப்படும் ராஜ்குமாா் மீனா, டிசம்பா் 8-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். அதைத் தொடா்ந்து டிசம்பா் 11-ஆம் தேதி சக குற்றவாளியான முகேஷ் என்ற பகோடி கைது செய்யப்பட்டாா். இந்தக் கும்பல் பல ஆண்டுகளாக போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளை திட்டமிட்டு குறிவைத்து, ஏமாற்றப்பட்ட விடியோக்கள் மற்றும் மிரட்டல் மூலம் பெரும் தொகையைப் பிரித்து வந்தனா் என்று காவல் துறை துணை ஆணையா் தெரிவித்தாா்.
