ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

அட்சய திருதியை: நாடு முழுவதும் தங்கம் விற்பனை 25% அதிகரிப்பு: சிஏஐடி தகவல்

நாடு முழுவதும் அட்சய திருதியை நாளான புதன்கிழமை தங்கம் விற்பனையில் 25 சதவீதம் அதிகரித்ததாக அகில இந்திய

Updated On :19 ஏப்ரல் 2018, 12:51 am IST

நாடு முழுவதும் அட்சய திருதியை நாளான புதன்கிழமை தங்கம் விற்பனையில் 25 சதவீதம் அதிகரித்ததாக அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து புது தில்லியில் சிஏஐடி அமைப்பின் பொதுச் செயலர் பிரவீண் கண்டேல்வால் புதன்கிழமை கூறியதாவது: 
நடப்பு திருமண சீசனில் அட்சய திருதியை நாளான புதன்கிழமை நாடு முழுவதும் பெரு நகரங்கள் மட்டுமின்றி சிறு நகரங்களிலும் கிராமப்புற பகுதிகளிலும் ஏராளமானோர் தங்கம்,  தங்க ஆபரணங்களை வாங்கினர்.  
அட்சய திருதியை விஷேச நாளாக கருதி அவர்கள் தங்கத்தை வாங்கியுள்ளனர்.
அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பின் மதிப்பீட்டின்படி,  பிற தினங்களைவிட  அட்சய திருதியை நாளான புதன்கிழமை தங்கம் விற்பனையில் 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கடந்த 2008-இல் இருந்து 2018 வரை தங்கத்தின் விலைகளில் 166 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், தங்கத்தின் மீதான முதலீடு பாதுகாப்பான, நம்பகமானது என்ற நம்பிக்கை  மக்களிடம் இருப்பது தெரிய வருகிறது.   உலகின் எந்தப் பகுதியிலும் கொடுத்து பணமாக்க முடியும் என்பதால் முதலீட்டு ஈர்ப்புப் பொருளாக தங்கம் திகழ்ந்து வருகிறது.
தங்கம் பங்கு காப்பீட்டு திட்டத்தை வர்த்தகர்கள் மத்தியில் அரசு ஊக்குவிக்க வேண்டும். அதேவேளையில்,  தங்க உலோகக் கடன் போன்ற திட்டங்களையும் அரசு தீவிரப்படுத்த வேண்டும். தங்கம் வாரியத்தில் சிறு வர்த்தகர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றார் பிரவீண் கண்டேல்வால்.
இந்திய  நகை வியாபாரிகள் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் பங்கஜ் அரோரா கூறுகையில், "நாளொன்றுக்கு தங்கம் விற்பனை ரூ.1,400 கோடியாகும்.  ஆனால், அட்சய திருதியை நாளான புதன்கிழமை தங்கம் விற்பனையானது சுமார் ரூ. 2 ஆயிரம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.  கடந்த 10 ஆண்டுகளில் தங்கம் வாங்கும் மக்களின் விருப்பம் மிகவும் அதிகரித்துவிட்டது.  
முன்னர்,  பெருநகரங்களில் மட்டுமே தங்கம் விற்பனை  பாராட்டத்தக்க வகையில் இருந்தது.  ஆனால், தற்போது,  சிறுநகரங்களிலும் தங்கம் விற்பனை அதிகரித்துள்ளது. 
 நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் நகைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.  தூய்மையான தங்கம் குறித்த அரசின் விழிப்புணர்வுப் பிரசாரம் மூலம் தங்கம் வாங்கும்  மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால்,  "ஹால்மார்க்' முத்திரையிடப்பட்ட  தங்கத்தை வாங்குவதற்கு தற்போது பொதுமக்கள் முன்னுரிமை அளித்து வருகின்றனர்' என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.