குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

உண்ணாவிரத போராட்டத்தை கைவிடமாட்டேன்:ஸ்வாதி மாலிவால் திட்டவட்டம்

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு ஆறு மாத காலத்துக்குள் மரண தண்டனை வழங்கவும், பெண்களுக்கெதிரான குற்றங்களில்

Updated On :19 ஏப்ரல் 2018, 12:50 am IST

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு ஆறு மாத காலத்துக்குள் மரண தண்டனை வழங்கவும், பெண்களுக்கெதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற எனது கோரிக்கைகளை பிரதமர் மோடி நிறைவேற்றாத வரை உண்ணாவிரதத்தை கைவிடுவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை' என்று தில்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் திட்டவட்டமாக தெரிவித்தார்.
சிறுமிகளுக்கெதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்க வலியுறுத்தியும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து நிறுத்தக் கோரியும் ஸ்வாதி மாலிவால் மேற்கொண்டு வரும் காலவரையறையற்ற உண்ணாவிரதம் புதன்கிழமை 6-ஆவது நாளாக தொடர்ந்தது. அப்போது செய்தியாளர்களிடம் ஸ்வாதி மாலிவால் கூறியதாவது: சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு ஆறு மாத காலத்துக்குள் மரண தண்டனை வழங்கவும், பெண்களுக்கெதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற எனது கோரிக்கைகளை பிரதமர் மோடி நிறைவேற்றாத வரை உண்ணாவிரதத்தை கைவிடுவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை' என்றார்.
இந்நிலையில், ஸ்வாதி மாலிவாலின் போராட்டத்துக்கு எய்ம்ஸ் உறைவிட மருத்துவர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எய்ம்ஸ் உறைவிட மருத்துவர் சங்க தலைவர் ஹர்ஜித் பட்டியா தில்லியில் செய்தியாளர்களிடம்  புதன்கிழமை கூறியதாவது: 
சமூகப் பொறுப்புள்ள, மனச்சாட்சியுள்ள எந்தவொரு மனிதனும் ஸ்வாதி மலிவாலின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். அந்த வகையில் அவரை நேரில் சந்தித்து நாங்கள் ஆதரவைத் தெரிவித்தோம். 
மேலும், இனியும் தாமதிக்காமல் ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவிலும், உத்தர பிரதேச மாநிலம், உன்னவாவிலும் சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களை கடுமையாகத் தண்டிக்க கோரியும், பாலியல் குற்றங்களை நீதித் துறை விசாரிக்கும்போது அதில் அரசியல் தலையீடுகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யக் கோரியும் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.