அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

தள்ளுவண்டியில் குடிநீர் விற்பனை: 572 பேரின் உரிமம் ரத்து செய்தது என்டிஎம்சி

வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) பகுதியில் சுகாதாரமற்ற முறையில்  தள்ளுவண்டியில் குடிநீர் விற்பனை செய்து வந்ததாக

Updated On :3 ஆகஸ்ட் 2018, 1:27 am IST

வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) பகுதியில் சுகாதாரமற்ற முறையில்  தள்ளுவண்டியில் குடிநீர் விற்பனை செய்து வந்ததாக  572 பேர்களின் உரிமத்தை என்டிஎம்சி ரத்துச் செய்துள்ளது. மேலும், சுமார் 500 தள்ளுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:  என்டிஎம்சி பகுதியில் 1,623 பேர் உரிமம் பெற்று தள்ளுவண்டியில் குடிநீர் வீற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தக் கடைகளில் மாநகராட்சி சார்பில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து சோதனை நடத்தப்பட்டு வந்தது.  அப்போது,  சுகாதாரமற்ற முறையில்  572 தள்ளுவண்டிகளில்  குடிநீர் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சுமார் 500-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.  இதை நடத்தி வந்தவர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. 
உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி, ஒரு லீட்டர் நீரில் அதிகளவில் 5 மில்லி கிராம் குளோரின் இருக்கலாம். ஆனால், இந்த தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யப்படும்  குடிநீரில் குளோரின் அளவு அதிகமாக இருந்தது என்று  அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.