மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

குரு கிரந்த சாகிப்  புனித நூலுக்கு  தேவை அதிகரிப்பு: டிஎஸ்ஜிஎம்சி புதிய முடிவு

குருகிரந்த் சாகிப்புனித நூலுக்கு அதிகரித்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு, சர்வதேச கணினிமய அச்சு இயந்திர வசதியை ஏற்படுத்த தில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு (டி எஸ்ஜிஎம்சி) முடிவு செய்துள்ளது.

Updated On :20 ஆகஸ்ட் 2018, 5:34 am IST

குருகிரந்த் சாகிப்புனித நூலுக்கு அதிகரித்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு, சர்வதேச கணினிமய அச்சு இயந்திர வசதியை ஏற்படுத்த தில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு (டி எஸ்ஜிஎம்சி) முடிவு செய்துள்ளது.
இந்தப் புதிய அச்சக இயந்திரமானது நாளொன்றுக்கு 15 ஆயிரம் பக்கங்களை அச்சடிக்கும் திறன் கொண்டிருக்கும் என்று என்று தில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழுவின் தலைவர் மஞ்சித் சிங் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: இந்த அச்சு இயந்திரம் ரகப் கஞ்ச் குருத்வாரா வளாகத்தில் ரூ.8 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் 
இதர குர்மத் இலக்கியம் உள்பட குருகிரந்த் சாகிப்பின் அதிகாரப்பூர்வ பதிவுகளை வெளியிட சட்ட உரிமையையும், சிறப்பு உரிமையையும் அம்ருத்சரஸில் உள்ள சிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி (எஸ்ஜிபிசி), டிஎஸ்ஜிஎம்சி ஆகிய இரண்டு அமைப்புகளும் பெற்றுள்ளன. 
இப்புதிய அச்சு இயந்திரமானது 20 ஆண்டுகள் பழைய இயந்தித்திற்கு மாற்றாக நிறுவப்பட உள்ளது. இதன் மூலம் இதுவரை குரு கிரந்த சாகிப்பின் புனித நூல் தோராயமாக ஒரு லட்சம் பிரதிதிகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. 
1,430 பக்கங்கள் கொண்ட குரு கிரந்த சாகிப்பில் சீக்கிய குருக்களின் புனித வசனங்களும், கபீர், ரவிதாஸ், நம்தேவ் போன்ற 30 இதர புனிதர்களின் வசனங்களும் இடம் பெற்றுள்ளன என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.