தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழக விவசாயிகள், பிரதமர் இல்லத்தை நோக்கிப் பேரணியாக செல்ல முயன்றபோது, போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனிடையே, தமிழக விவசாயிகளின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு ஆகியவை தில்லி நாடாளுமன்றச் சாலையில் நான்காவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது அவர்கள் கை தட்டியும் கும்மி அடித்தும் வித்தியாசமான முறைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மதியம் 2.30 அளவில் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நாடாளுமன்றச் சாலைக்கு அருகிலுள்ள வெளியுறவுத் துறை அமைச்சகம் அருகே விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, அங்கிருந்து பிரதமர் இல்லத்தை நோக்கிப் பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை தில்லி போலீஸார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி அருகிலுள்ள மந்திர் மார்க் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இது குறித்து பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கப் போவதில்லை. எனவே, உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தலையிட்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உயிர் போகும் வரை போராடுவோம். தில்லியில் எங்களது போராட்டத்தை பிரதமர் மோடி ஒடுக்க நினைக்காலம்.
தமிழக விவசாயிகள் ஒருங்கிணைந்து பெரியளவில் போராட்டம் நடத்த உள்ளோம். தில்லி போராட்டம் தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் போராட்டங்கள் தொடரும். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை செயல்படவிடாமல் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏனாதிமங்கலம் மங்களபுரீசுவரா் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் தரிசனம்

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

போலி சான்றிதழ் தயாரித்து அரசுப் பணம் கையாடல்: இருவருக்கு சிறைத் தண்டனை

1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழா் கால பெளத்த, துவாரபாலகா் சிற்பங்கள் கண்டெடுப்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

