நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

கே.எம்.பி. நெடுஞ்சாலையால் தில்லி காற்று மாசு குறையும்: மனோஜ் திவாரி நம்பிக்கை

குன்ட்லி - மானேசர்- பல்வல் இடையே அமைக்கப்பட்டுள்ள கேஎம்பி நெடுஞ்சாலையால் தில்லியில் காற்று மாசு கணிசமாகக் குறையும்

Updated On :30 ஜனவரி 2024, 11:10 pm IST

குன்ட்லி - மானேசர்- பல்வல் இடையே அமைக்கப்பட்டுள்ள கேஎம்பி நெடுஞ்சாலையால் தில்லியில் காற்று மாசு கணிசமாகக் குறையும் என்று பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி நம்பிக்கை தெரிவித்தார்.
 இது தொடர்பாக தில்லியில் திங்கள்கிழமை அவர் கூறியதாவது: 
தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் நீடிப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். காற்று மாசுவைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பிலுள்ள தில்லி அரசு, இது தொடர்பாக பாராமுகமாக உள்ளது. தில்லியில் நிலவும் காற்று மாசுவுக்கு பொறுப்புக் கூறாமல் தில்லி முதல்வர் மக்களின் வரிப்பணத்தில் துபைக்கு சுற்றுலா சென்றார். இந்நிலையில், குன்ட்லி - மானேசர் - பல்வல் இடையே சுமார் ரூ.6,400 கோடி செலவில் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள 136 கிலோ மீட்டர் நீளமான கேஎம்பி நெடுஞ்சாலையால் வாகனங்களின் பயண நேரம் பெருமளவில் குறையும். இதனால், எரிபொருள் பயன்பாடும், காற்று மாசும் குறையும். இந்நிலையில், தில்லியில் நிலவும் காற்று மாசைக் குறைக்க நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.