மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சத்தீஸ்கர் தேர்தலில் ரமண் சிங்குக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் வாஜ்பாய் மருமகன் போட்டி

சத்தீஸ்கர் சட்டப் பேரவைக்கு நடைபெறவிருக்கும் தேர்தலில் முதல்வர் ரமண் சிங்குக்கு எதிராக காங்கிரஸ் சார்பில்

Updated On :22 அக்டோபர் 2018, 8:15 pm

சத்தீஸ்கர் சட்டப் பேரவைக்கு நடைபெறவிருக்கும் தேர்தலில் முதல்வர் ரமண் சிங்குக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் பாஜகவின் மறைந்த மூத்த தலைவர் அடல் பிகாரி வாஜ்பாயின் மருமகன் கருணா சுக்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கர் சட்டப் பேரவைக்கு நவம்பர் மாதம் இருகட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் ராஜ்நந்த்கோன் சட்டப் பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் முதல்வர் ரமண் சிங் போட்டியிடுகிறார். இந்நிலையில், முதல் கட்டத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2ஆவது பட்டியலை காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை வெளியிட்டது. இதில் ராஜ்நந்த்கோன் சட்டப் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் பிரதமரும், பாஜவின் மறைந்த மூத்த தலைவருமான வாஜ்பாயின் மருமகன் கருணா சுக்லா அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜகவில் முன்பு இருந்த சுக்லா, அக்கட்சியில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு விலகினார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் அவர் சேர்ந்தார்.
காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்ட 2ஆவது கட்ட வேட்பாளர் பட்டியலில், 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பு, 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் முதல்கட்டமாக வெளியிட்டிருந்தது.
சத்தீஸ்கர் சட்டப் பேரவைக்கு நவம்பர் மாதம் 12ஆம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய செவ்வாய்க்கிழமையே (அக். 23) கடைசி நாளாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.