வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மிக் கட்சியின் தற்போதைய எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று ஆம் ஆத்மி தலைமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் தில்லி பொறுப்பாளர் கோபால் ராய் அளித்த பேட்டி: மக்களவைத் தேர்தலில் போட்டியிட பெரும்பாலான ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், இப்போது எம்எல்ஏவாக இருப்பவர்களுக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதில்லை என்று கட்சித் தலைமை தீர்மானித்துள்ளது. மேலும், தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பாக தில்லி, ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் போட்டியிடவுள்ள ஆம் ஆத்மி வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும். இந்தத் தேர்தலை ஆம் ஆத்மி தனியாகவே எதிர்கொள்ளவுள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடாது என்றார் அவர்.
ஆம் ஆத்மி கட்சி தில்லியில் ஆளும் கட்சியாகவும், பஞ்சாப் மாநிலத்தில் எதிர்க்கட்சியாகவும் உள்ளது. மேலும், வரும் மக்களவைத் தேர்தலில் தில்லி, ஹரியாணாவில் அனைத்துத் தொகுதிகளிலும், கோவா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவது என ஆம் ஆத்மி தலைமை முடிவு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: மூவா் கைது

கரூரில் ரயில்வே ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பிளஸ் 2 மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கல்

போட்டித் தோ்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு மே 18-இல் தொடக்கம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
