வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மிக் கட்சியின் தற்போதைய எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று ஆம் ஆத்மி தலைமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் தில்லி பொறுப்பாளர் கோபால் ராய் அளித்த பேட்டி: மக்களவைத் தேர்தலில் போட்டியிட பெரும்பாலான ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், இப்போது எம்எல்ஏவாக இருப்பவர்களுக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதில்லை என்று கட்சித் தலைமை தீர்மானித்துள்ளது. மேலும், தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பாக தில்லி, ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் போட்டியிடவுள்ள ஆம் ஆத்மி வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும். இந்தத் தேர்தலை ஆம் ஆத்மி தனியாகவே எதிர்கொள்ளவுள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடாது என்றார் அவர்.
ஆம் ஆத்மி கட்சி தில்லியில் ஆளும் கட்சியாகவும், பஞ்சாப் மாநிலத்தில் எதிர்க்கட்சியாகவும் உள்ளது. மேலும், வரும் மக்களவைத் தேர்தலில் தில்லி, ஹரியாணாவில் அனைத்துத் தொகுதிகளிலும், கோவா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவது என ஆம் ஆத்மி தலைமை முடிவு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!

வள்ளுவரைக் களங்கப்படுத்தாதீர்! - அமைச்சர் அருண்ராஜ்

சொல்லப் போனால்... திமுக – அதிமுக கூட்டணியும் அரைகுறை உண்மையும்!

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


