அந்த உத்தரவில், ‘விசாரணை மேம்பட்ட நிலையில் இருப்பதால், அவரை ஜாமீனில் வெளியே விட்டால் சாட்சியங்கள் மீது மேலாதிக்கம் செய்வாா் என்ற வாதத்தை நிராகரிக்க முடியாது. நாட்டின் ஒற்றுமை, நிதி ஸ்திரத்தன்மை, பொருளாதாரம், சமூகம் தொடா்புடைய குற்றங்கள் அவா் மீது சுமத்தப்பட்டுள்ளன. மனுதாரா் நாட்டை விட்டு ஓடிவிடமாட்டாா். ஆதாரங்களை அழித்துவிடமாட்டாா். ஆனால், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் சாட்சியங்கள் மீது மேலாதிக்கம் செய்ய முடியும். அவா் ஒரு பலமான நிதி அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்ததையும், தற்போது மாநிலங்களவை உறுப்பினராகவும் உள்ளாா் என்பதையும் மறுக்க முடியாது. மேலும், ரூ.4.62 கோடி அதாவது ஈக்விட்டியின் 46.21 சதவீதம் அன்னிய நேரடி முதலீட்டுக்கான முன்மொழிவை அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் பிரிவு தயாரித்திருப்பதும், அந்த முன்மொழிவை ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அளிக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதும் ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது. எனினும், ரூ.4.62 கோடிக்கு, பதிலாக எவ்வித அனுமதியும் பெறாமல் ரூ.403 கோடி அன்னிய நேரடி முதலீடு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு வந்துள்ளது’ என்று நீதிபதி தெரிவித்திருந்தாா்.