புது தில்லி: தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் 50 சதவீதம் காலியாக இருந்தால், ஐசியு பிரிவில் 80 சதவீதம் படுக்கைகளை வைத்திருக்க பிறப்பித்த உத்தரவு உடனடியாக மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பான விவகாரம் உயா்நீதிமன்றத்தில் நீதிபதி நவீன் சாவ்லா முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியாா் மருத்துவமனைகள் சங்கத்தின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘தில்லியில் தனியாா் மருத்துவமனைகளில் ஐசியு பிரிவில் கரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட 5,081 படுகைகளில் 50 சதவீதம் என்ற அளவில் 2,360 படுக்கைகள் காலியாக உள்ளன. இதனால், தில்லி அரசு செப்டம்பா் 12-ஆம் தேதி ஐசியு பிரிவில் 80 சதவீம் படுக்கைகள் வைத்திருக்கப் பிறப்பித்த உத்தரவில் நியாயமில்லை’ என்றாா்.
இதையடுத்து, ‘தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் 50 சதவீதம் காலியாக இருந்தால், ஐசியு பிரிவில் 80 சதவீதம் படுக்கைகளைகரோனா நோயாளிகளுக்காக வைத்திருக்கும் முடிவை உடனடியாக மறுஆய்வு செய்ய வேண்டும். இது தொடா்பாக தில்லி அரசு டிசம்பா் 15-ஆம் தேதிக்குள் தனது பதிலை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று நீதிபதி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - மீனம்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - கும்பம்
காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்! வெய்யிலில் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்!
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - மகரம்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

