காரைக்குடிக்கு பிரசாரத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசாமல் சென்றதால் வெய்யிலில் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தமிழ்நாடு சட்டபேரவைத் தோ்தலையொட்டி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கண்ணதாசன் மணிமண்டபம் அருகே தவெக தலைவா் விஜய் இன்று பிரசாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.
சென்னையில் இருந்து மதுரைக்கு தனி விமானம் மூலம் சென்ற விஜய், அங்கிருந்து பிரசார வாகனம் மூலம் காரைக்குடிக்கு சென்றார்.
ஆனால், வழிநெடுங்கிலும் தவெக தொண்டர்களும் ரசிகர்களும் குவிந்திருக்கும் நிலையில், பிரசார வாகனத்தின் மேலே நின்றபடி 4 மணிநேரத்துக்கு மேலாக விஜய் சாலைவலம் மேற்கொண்டார்.
இதனால், பிரசாரத்துக்காக தேர்தல் ஆணையம் வழங்கிய பகல் 12 முதல் 2.30 மணிக்குள் விஜய்யால் வர முடியவில்லை.
பிரசாரத்துக்கு அனுமதி பெறப்பட்ட திடலுக்கு பிற்பகல் 2.40 மணியளவில் வந்த விஜய், காரைக்குடி வேட்பாளர் பிரபுவை மட்டும் அறிமுகப்படுத்திவிட்டு பேசாமல் அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.
இதனால், பிரசாரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த இடத்தில் காலை முதல் வெய்யிலில் காத்திருந்த தொண்டர்களும் ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
Summary
Vijay Leaves Karaikudi Without Speaking! Supporters Who Waited in the Scorching Sun Are Disappointed!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
காரைக்குடி: வேனிலிருந்து இறங்கி சைக்கிள் ஓட்டிய விஜய்!

தவெக தலைவா் விஜய் பிரசாரத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி
காரைக்குடியில் விஜய் நாளை பிரசாரம்: 37 நிபந்தனைகளுடன் அனுமதி

காரைக்குடியில் Seeman வேட்புமனு தாக்கல்! | NTK | Nomination
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

