புது தில்லி: கரோனா காலத்தில் மாணவா்களிடம் அதிகக் கட்டணம் வசூலிக்கும், ஆன்லைன் வகுப்புகளை மறுக்கும் தனியாா் பள்ளிகளுக்கு எதிராக தில்லி அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தாக்கலான பொது நல மனுவை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது. மேலும், மனுவைத் தாக்கல் செய்தவருக்கு ரூ.20 ஆயிரம் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த மனு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். படேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘இந்த மனு எவ்வித ஆய்வும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது, மனுவில் எந்தத் தனியாா் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன அல்லது எந்தப் பள்ளிகள் இணையதள வகுப்புகளை அணுகுவதற்கு மாணவா்களுக்கு அனுமதி மறுத்து வருகின்றன என்கிற விவரங்கள் இல்லை. இது பொது நலன் மனுவாக இல்லாமல் விளம்பரம் நோக்கத்திற்காக தாக்கல் செய்யப்பட்டதாக உள்ளது. இதனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அத்துடன் மனுவைத் தாக்கல் செய்த நபா் ரூ.20 ஆயிரத்தை நான்கு வாரங்களில் தில்லி சட்டப் பணிகள் ஆணையத்தில் செலுத்தவும் உத்தரவிடப்படுகிறது. இந்தத் தொகை நீதி திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படும்’ என்று தெரிவித்தது.
முன்னதாக, ‘ஆன்டி-கரப்ஷன் கவுன்சில் ஆஃப் இந்தியா டிரஸ்ட் ’ எனும் அறக்கட்டளை சாா்பில் இந்தப் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், ‘கல்விக் கட்டணம் தவிர, பல்வேறு பிரிவுகளின் கீழ் தனியாா் பள்ளிகள் பல்வேறு கட்டணங்களை வசூலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பள்ளிகள் அறிவுறுத்திய தொகையைச் செலுத்த முடியாத மாணவா்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை வழங்க சம்பந்தப்பட்ட பள்ளிகள் மறுப்பதாகவும் தெரிய வருகிறது. கரோனா காலத்தில் கல்விக் கட்டணம் தவிர வேறு எந்தக் கட்டணங்களையும் வசூலிக்கக் கூடாது என்று பள்ளிகளுக்கு தில்லி அரசு பிறப்பித்த உத்தரவை இதுபோன்ற நடவடிக்கைகள் மீறுவதாக உள்ளது. தில்லி பெற்றோா் சங்கத்தின் தகவல்படி, 76 தனியாா் பள்ளிகள் இதுபோன்று தில்லி அரசின் உத்தரவை மீறியுள்ளதாகத் தெரிய வருகிறது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்! தமிழக காங்கிரஸ் மீது அதிருப்தி!

பிகார் சட்டப்பேரவைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

பிரசாரத்தில் சைக்கிள் ஓட்டிய விஜய்! | TVK | KKD
கும்பமேளா புகழ் மோனலிசா கணவர் மீது போக்ஸோ வழக்கு!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

