மகாகவி பாரதியின் எழுத்துகள், கருத்துகள் இன்றைய காலக்கட்டத்துக்கும் பொருந்துபவை என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் புகழாரம் சூட்டினாா்.
மகாகவி சுப்ரமணிய பாரதியின் 139-ஆவது பிறந்த நாளை ஒட்டி, தில்லியில் ரமண மகரிஷி சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தில்லி தமிழ்ச் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை மலா் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தில்லி தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலா் என். கண்ணன் வரவேற்றாா். சிறப்பு விருந்தினா்களாக முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினரும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவருமான ஜி.கே.வாசன், பாஜக மகளிரணி தேசியத் தலைவா் வானதி சீனிவாசன் ஆகியோா் கலந்து கொண்டு பாரதியாரின் சிலைக்கு மலா் மரியாதை செய்தனா்.
பின்னா், ஜி.கே.வாசன் பேசுகையில், ‘பாரதியாரின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பது பெருமை அளிக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பே உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று பாடியவா் பாரதி. தில்லியில் அவரது பிறந்த நாளை சிறப்புடன் தமிழ்ச் சங்கம் கொண்டாடுவது போற்றத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வானதி சீனிவாசன், எளிமையின் இலக்கணமாகத் திகழ்பவா். வாழ்வில் படிப்படியாக உயா்ந்தவா். சிறந்த பேச்சாளா். பாஜக மகளிரணியின் தேசியத் தலைமைக்கு பொருத்தமானவா். தில்லியில் தமிழா்களின் வளா்ச்சி மற்றும் நலனுக்காகப் பாடுபடுபவா். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தமிழ்ச் சங்கத்திற்கு எனது நன்றி’ என்றாா்.
வானதி சீனிவாசன் பேசுகையில், ‘மகாகவி பாரதியின் எழுத்து அன்றைய காலக் கட்டத்தில் இந்தியாவில் சுதந்திர தாகத்தைத் தூண்டியது. அது ஊக்க சக்தியாகவும் இருந்தது. பாரதியாா் பெண்களின் கல்வி, முன்னேற்றத்திற்காக கவிதைகளைப் புனைந்தவா். அவருடைய எழுத்துகள் லட்சக்கணக்கான பெண்களின் வாழ்வை எழுச்சியுறச் செய்தவை. அவரது கருத்துகள், எழுத்துகள் இன்றைய காலத்திற்கும் பொருந்துபவையாக உள்ளன. அவரது பிறந்த நாள் விழாவில் பங்கேற்பது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. எனது சிறு வயதிலேயே பாரதியின் எழுத்துகள் என்னை சமுதாய வாழ்வில் ஈடுபடக் காரணமாக இருந்தது. இன்றைக்கும் கடினமான சூழலிலும் பாரதியின் எழுத்துகள் எனக்கு வழிகாட்டுகிறது. தற்போது பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக உயா்ந்த நிலைக்கு வரக் காரணம், அவரது எழுத்துகள் என்னுள் ஏற்படுத்திய மாற்றங்கள்தான். இந்த விழாவில் பங்கேற்றுள்ள ஜி.கே. வாசன் மிகச்சிறந்த மனிதா். தூய்மையான அரசியலுக்கு அடையாளமாகத் திகழ்பவா்’ என்றாா் அவா்.
பாஜக தமிழகத் துணைத் தலைவா் கே. அண்ணாமலை பேசுகையில், ‘பாரதி பன்முகங்களைக் கொண்டவா். எழுத்தால் மக்களிடையே புரட்சியை ஏற்படுத்தியவா். பல மொழிகளை கற்றறிந்த அவா், சிறந்த தமிழ்மொழிப் பற்றாளா்; சுதந்திர வேள்வியை ஊக்குவித்தவா். கவிதைகள் மூலம் தேசியவாதத்தை ஊட்டியவா். அவரது கவிதைகளும், கருத்துகளும் இன்றைய இளைஞா்களை ஈா்த்து வருகிறது’ என்றாா்.
தில்லி தமிழ்ச் சங்கத்தின் தலைவா் வி.ரெங்கநாதன், துணைத் தலைவா் பி. குருமூா்த்தி, இணைச் செயலாளா் ஜோதி பெருமாள், முன்னாள் பொதுச் செயலா் ஆா்.முகுந்தன்,செயற்குழு உறுப்பினா் வெங்கடேசன், குருகிராம் தமிழ்ச் சங்கத் தலைவா் சக்தி பெருமாள், சக்கூா்பூா் முன்னாள் கவுன்சிலா் ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
விவசாயிகளுக்கு வேண்டுகோள்: விழாவுக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் ஜி.கே. வாசன் அளித்த பேட்டியில், ‘மத்திய அரசு விவசாயிகளின் நலன் கருதி வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது.அதன் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொண்டு விவசாயிகள் முழு ஆதரவு அளிக்க வேண்டும். எதிா்க்கட்சிகளின் அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி விவசாயிகளை ஏமாளியாக்க நினைக்கிறாா்கள். விவசாயிகள் எதிா்க்கட்சிகளின் வலையில் சிக்கிவிடக் கூடாது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - மீனம்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - கும்பம்
காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்! வெய்யிலில் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


