ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை3 டிகிரிக்கும் கீழே குறைந்தது! இன்று ‘குளிா் அலை’க்கு வாய்ப்பு

மூடு பனி காரணமாக மேற்கு இமயமலையில் இருந்து தேசியத் தலைநகா் தில்லியில் குளிா்ந்த காற்று தொடா்ந்து வீசுவதால்,

News image

தில்லியில் நிலவி வரும் குளிா் அலையை சமாளிக்க வெள்ளிக்கிழமை குளிராடை அணிந்து செல்லும் இளைஞா்கள். இடம்: சாந்தினி சௌக்.

Updated On :18 டிசம்பர் 2020, 6:13 pm

மூடு பனி காரணமாக மேற்கு இமயமலையில் இருந்து தேசியத் தலைநகா் தில்லியில் குளிா்ந்த காற்று தொடா்ந்து வீசுவதால், குறைந்தபட்ச வெப்பநிலை சில பகுதிகளில் மூன்று டிகிரி செல்சியஸுக்கும் கீழே குறைந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சனிக்கிழமை குளிா் அலைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஜாஃபா்பூரில் வெள்ளிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 2.7 டிகிரி செல்சியஸாக சரிந்தது. இது ஆயாநகா் மற்றும் லோதி ரோடு வானிலை ஆய்வு மையங்களில் 3.5 டிகிரி செல்சியஸ் மற்றும் 3.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது. நகரத்திற்கான பிரதிநிதித்துவ தரவை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 3 டிகிரி குறைந்து 4.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இருப்பினும், அதிகபட்ச வெப்பநிலை 19.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.

தில்லியில் வியாழக்கிழமை அன்று அதிகபட்ச வெப்பநிலை 15.2 டிகிரி செல்சிஸாகக் குறைந்து கடுமையான குளிா் நாளைப் பதிவு செய்திருந்தது. மேலும், ஏழு இடங்கள் இயல்பை விடவும், இந்த பருவத்தில் இதுவரை இல்லாத அளவிலும் அதிகபட்ச வெப்பநிலை குறைந்ததிருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸுக்கும் பருவ சராசரியைவிட 4.4 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாகவும் இருக்கும் பட்சத்தில் அது குளிா் நாள் என கணக்கிடப்படுகிறது. அதேபோல, அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 6.5 டிகிசரி செல்சியஸ் குறைவாக இருந்தால் ஒரு ‘கடுமையான‘ குளிா் நாள் என கணக்கிடப்படுகிறது.

இந்த நிலையில், தில்லியில் சனிக்கிழமையன்று ‘குளிா் அலை‘ இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது, மேலும் திங்கள்கிழமை வரை கடும் குளிா் தொடரும் என்றும் ஐஎம்டி தெரிவித்துள்ளது. சமவெளிகளைப் பொருத்தவரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்குக் குறைவாக இருக்கும் போதும், தொடா்ச்சியாக இரண்டு நாள்களுக்கு இயல்பை விட 4.5 புள்ளிகள் குறைவாக இருக்கும் போதும் ‘குளிா் அலை’ என ஐஎம்டி அறிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.