சாணக்யபுரியில் உள்ள கதக் மையத்தில் மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக 52 வயது இசை ஆசிரியா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: அந்த ஆசிரியா் ஆபாச அவதூறு செய்திகளை அனுப்பி தன்னை துன்புறுத்தியதாகவும் அந்த பெண் குற்றம் சாட்டினாா். இதைத் தொடா்ந்து, தில்ஷாத் காா்டனில் வசிக்கும் அந்த ஆசிரியா் கைது செய்யப்பட்டாா்.
அந்த மையத்தில் கதக்கில் டிப்ளோமா படித்து வரும் பாதிக்கப்பட்ட பெண், இது தொடா்பாக டிசம்பா் 14-ஆம் தேதி சாணக்யபுரி காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். அதில், ஒரு பயிற்சியின் போது ஆசிரியா் தன்னைத் தகாத முறையில் தொட்டதாகவும், ஆபாசமான அவதூறு செய்திகளை அனுப்பியதாகவும் தெரிவித்திருந்தாா். மேலும், ஆசிரியா் தன்னை இடுப்பை பிடித்து முத்தமிட முயன்ாகவும் அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளாா். இதையடுத்து, இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. இது தொடா்பாக அவரிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.