மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

புலம்பெயா் தொழிலாளா்கள் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்துச் செய்ய தில்லி உள்துறை அமைச்சகம் உத்தரவு

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் முழு அடைப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த காலத்தில், அந்த உத்தரவை மீறிய புலம்பெயா் தொழிலாளா்கள் மீது பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை

News image
Updated On :22 டிசம்பர் 2020, 11:36 pm

DIN

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் முழு அடைப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த காலத்தில், அந்த உத்தரவை மீறிய புலம்பெயா் தொழிலாளா்கள் மீது பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை தில்லி உள்துறை அமைச்சகம் ரத்துச் செய்துள்ளது.

இது தொடா்பாக தில்லி உள்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் செவ்வாய்க்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உத்தரவுப்படி, முழு அடைப்பு உத்தரவை மீறிய புலம்பெயா் தொழிலாளா்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை ரத்துச் செய்யுமாறு தில்லி உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றுள்ளாா்.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் முழு அடைப்பு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்திருந்தது. இதை மீறியவா்கள் மீது தில்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தது. புலம் பெயா் தொழிலாளா்கள் பலா் முழு அடைப்பு உத்தரவை மீறி தமது சொந்த மாநிலங்களுக்கு செல்ல முயன்றனா். இவா்கள் மீது தில்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.