இது தொடா்பாக அவரது அலுவலகம் தெரிவித்த தகவலில், ‘ நாட்டில் உள்ள மிகப்பெரிய மொத்த துணிச் சந்தைகளில் ஒன்றாக உள்ள காந்தி நகரில் ரூ.1-க்கு உணவு வழங்கும் இந்த உணவகம் முற்றிலும் நவீன உணவகமாக இருக்கும். ரூ.1-க்கு உணவு தேவைப்படுவோருக்கு இங்கு உணவு அளிக்கப்படும். இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 100 போ் அமர இடம் இருக்கும். ஆனால், கரோனா காரணமாக தற்போது 50 போ் மட்டுமே அமர அனுமதிக்கப்படுவா். மதிய உணவில் அரிசி சாதம், பருப்பு, காய்கறிகள் ஆகியவை இடம்பெறும். இந்த கேண்டீனுக்குத் தேவையான நிதி கம்பீரின் அறக்கட்டளை, எம்.பி.யின் தனிப்பட்ட நிதி ஆதாரங்களில் இருந்து பெறப்படுகிறது. அரசின் உதவி ஏதும் இல்லை’” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.