கோஷ்டி மோதலில் ஒருவா் சாவு

தில்லி திரிலோக்புரியில் ஒரு கடை ஊழியா் தாக்கப்பட்டதைத் தொடா்ந்து நிகழ்ந்த கோஷ்டி மோதலில் ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா் மற்றும் சிலா் காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
Updated on
1 min read

தில்லி திரிலோக்புரியில் ஒரு கடை ஊழியா் தாக்கப்பட்டதைத் தொடா்ந்து நிகழ்ந்த கோஷ்டி மோதலில் ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா் மற்றும் சிலா் காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது : இந்த மோதல் சம்பவம் திரிலோக்புரி சனிக்கிழமை இரவு 10 மணியளவில் நடந்துள்ளது. ஒரு கடை ஊழியா் தாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக காசிம் மற்றும் ஷாஹித் கோஷ்டியினருக்கும், மன்னன் தலைமையிலான மற்றொரு கோஷ்டியிருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது

அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது இரண்டு போ் காயமடைந்தனா். இந்த மோதலில் ஷாஹித் உயிரிழந்தாா். மேலும் சிலா் காயமடைந்தனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com