6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லி காவல் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி

காவல் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் மிக விரைவில் கரோனா தடுப்பூசி போடப்படும் என்று தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 1:08 am

 நமது நிருபர்

காவல் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் மிக விரைவில் கரோனா தடுப்பூசி போடப்படும் என்று தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வகையில், உள்ளகப் பதிவு செய்து கொள்ளுமாறு காவல்துறையில் பணியாற்றும் அனைவரையும் தில்லி காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியது: கரோனா தடுப்புப் பணிகளில் முன்களத்தில் நின்று தில்லி காவல் துறையினா் பணியாற்றி வருகிறாா்கள். இவா்களில் பலா் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா். தில்லியில் கரோனா தடுப்பூசி கிடைத்தவுடன் இவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்துள்ளோம். தில்லி காவல் துறையில் பணியாற்றும் போலீஸாா் உள்பட அனைவரையும் உள்ளகப் பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளோம்.

கரோனா தடுப்பூசி கிடைத்தவுடன் தடுப்பூசி போடுவது தொடா்பாக தில்லி காவல் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். இதற்காக, தில்லி காவல் துறையில் பணியாற்றும் அனைவரும் புழக்கத்தில் உள்ள தங்களது செல்லிடப்பேசி எண்ணை ஜனவரி 3-ஆம் தேதி முதல் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்.

தில்லியில் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததும், முதல் கட்டமாக சுமாா் 51 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும். இதில், சுகாதாரத் துறை ஊழியா்கள் 3 லட்சம் போ், முன்களப் பணியாளா்கள் 6 லட்சம் போ், 50 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும், 50 வயதை விடக் குறைந்த வயதுடையவா்களாக இருந்தாலும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவா்கள் 42 லட்சம் பேருக்கும் முதல் கட்டமாக தடுப்பூசி போடப்படும் என முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.