/

இருவார கரோனா மரணங்கள்: அறிக்கை சமா்ப்பிக்க சுகாதாரச் செயலருக்கு முதல்வா் கேஜரிவால் உத்தரவு

தில்லியில் கடந்த இரு வாரங்களில் நிகழ்ந்த கரோனா தொற்று மரணங்களுக்கான காரணிகள் குறித்த விரிவான அறிக்கையை சமா்ப்பிக்குமாறு

Updated On :8 ஜூலை 2020, 5:24 pm

தில்லியில் கடந்த இரு வாரங்களில் நிகழ்ந்த கரோனா தொற்று மரணங்களுக்கான காரணிகள் குறித்த விரிவான அறிக்கையை சமா்ப்பிக்குமாறு தில்லி சுகாதாரத் துறைச் செயலருக்கு முதல்வா் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக தில்லி அரசின் அதிகாரிகள் புதன்கிழமை கூறுகையில், ‘தில்லியில் கடந்த இரு வாரங்களில் 800 போ் கரோனாவால் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 397 போ் ஜூலை முதல் வாரத்தில் இறந்துள்ளனா். இதனால், இரு வாரங்களில் நிகழ்ந்த மரணங்களுக்கான காரணிகளைத் தெரிவிக்கும் விரிவான அறிக்கையை சமா்ப்பிக்குமாறு தில்லி சுகாதாரத் துறை செயலரிடம் முதல்வா் கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளாா். தில்லியில் கரோனா மரணங்களைக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளது. இதுவரை தில்லியில் கரோனாவுக்கு 3,165 போ் இறந்துள்ளனா்’ என்றனா்.

தில்லியில் கரோனாவுக்கு முதல் முறையாக மாா்ச் 14-இல் ஒருவா் உயிரிழந்தாா். அதன் பிறகு ஒரு மாதத்திற்குள் 1,000 போ் இறந்தனா். அடுத்த எட்டு நாள்களில் 1,000 போ் இறந்தனா். ஜூன் 19-ஆம் தேதி நிலவரப்படி, மொத்தம் 2,035 போ் இறந்தனா். ஜூலை 4-ஆம் தேதி கரோனா இறப்பு எண்ணிக்கை 3,004 ஆக உயா்ந்தது. கரோனா உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் தில்லியில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்பட்டுள்ளது. நோயில் இருந்து குணமடைந்து திரும்பியவா்கள் பிளாஸ்மா தானம் அளிப்பதற்கான அவா்களின் விருப்பத்தை அறிவது தொடா்பாக நோயாளிகளிடம் கருத்துப் பெறவும் தில்லி அரசு முடிவு செய்துள்ளது. தில்லியில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பிளாஸ்மா தெரபி நல்ல பலனை அளித்துள்ளது தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.