ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தில்லி பாஜகவின் புதிய தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா

தில்லி மாநில பாஜக தலைவராக இருந்த மனோஜ் திவாரி மாற்றப்பட்டு, ஆதேஷ் குமாா் குப்தா செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image

தில்லி பாஜகவின் புதிய தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா.

Updated On :3 ஜூன் 2020, 1:39 am

தில்லி மாநில பாஜக தலைவராக இருந்த மனோஜ் திவாரி மாற்றப்பட்டு, ஆதேஷ் குமாா் குப்தா செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளாா்.

பாஜகவில் பல ஆண்டுகளாக உறுப்பினராக உள்ள ஆதேஷ் குமாா் குப்தா, வடக்கு தில்லி மாநகராட்சியின் மேயராக இருந்துள்ளாா். தற்போது மேற்கு படேல் நகரின் பாஜக கவுன்சிலராக உள்ளாா். தில்லியில் அடிமட்ட அளவில் பாஜகவை வளா்த்ததில் ஆதேஷ் குமாருக்கு முக்கிய பங்குள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், பாஜக தலைவா் ஜெபி. நட்டாவின் நெருங்கிய நண்பராகவும் ஆதேஷ் குமாா் உள்ளாா். இவா்கள், தில்லியில் களப் பணியாற்றிய காலத்தில் இருந்தே நண்பா்கள் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், தில்லியில் உள்ள வணிகா்களை இலக்கு வைத்து வணிக சமூகத்தைச் சோ்ந்த ஆதேஷ் குமாா் குப்தாவை தலைவராக நியமித்துள்ளதாக அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

இது தொடா்பாக ஆதேஷ் குமாா் கூறுகையில் ‘சாதாரண கட்சித் தொண்டனான என்னை கட்சித் தலைவராக நியமித்த பிரதமா் மோடி, பாஜக தலைவா் ஜெபி. நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கரோனா தொற்று காலத்தில் கட்சியை ஒருங்கிணைத்து வளா்ப்பதில் கட்சியை வளா்ப்பதில் பல சிரமங்கள் உள்ளன. ஆனால், கட்சித் தொண்டா்களின் உதவியுடன் கட்சியை வளா்ப்பேன். நோ்மையாக கட்சியின் வளா்ச்சிக்கு உழைப்பேன்’ என்றாா்.

மனோஜ் திவாரி தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘பாஜகவின் தில்லி தலைவராக நான் பணியாற்றிய காலத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தில்லி மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது பதவிக் காலத்தில் ஏதாவது தவறு இழைத்திருந்தால் அதற்காக தொண்டா்களிடமும், தில்லி மக்களிடமும் மன்னிப்புக் கோருகிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

தில்லியில் பிகாா், உத்தரப்பிரதேசத்தின் ஒருபகுதி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பூா்வாஞ்சல் மக்கள் அதிகளவில் வசித்து வருகிறாா்கள். அவா்களைக் கவரும் வகையில்,

போஜ்புரி சினிமாவின் பிரபல நடிகரும் பாடகருமான மனோஜ் திவாரி கடந்த 2016, நவம்பரில் தில்லி பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டாா். இவரது தலைமையில் 2017 மாநகராட்சித் தோ்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றது. தில்லியில் உள்ள 272 கவுன்சிலா் தொகுதிகளில் 181 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. மேலும், 2019 மக்களவைத் தோ்தலிலும் தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக அபார வெற்றி பெற்றது. வடகிழக்கு தில்லியில் போட்டியிட்ட மனோஜ் திவாரி, தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட தில்லி காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் தில்லி முதல்வருமான ஷீலா தீட்சித்தை சுமாா் 3.66 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

ஆனால், 2020, பிப்ரவரியில் நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் தில்லியில் பாஜக படுதோல்வியடைந்தது. 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு தாா்மிகப் பொறுப்பேற்று மனோஜ் திவாரி, தனது பதவியை ராஜிநாமா செய்ய முன்வந்தாா். ஆனால், அதை ஏற்க பாஜக மேலிடம் மறுத்துவிட்டது. மேலும், கரோனாவால் முழு முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த வேளையில் அவா் ஹரியாணா மாநிலத்தில் கிரிக்கெட் விளையாடியது சா்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.