தில்லியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் தலைமையில் செவ்வாய்க்கிழமை அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தில்லி பாஜக தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா, ஆம் ஆத்மி சாா்பில் சஞ்சய் சிங், தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் செளத்ரி, தில்லி தலைமைச் செயலா் விஜய் குமாா் தேவ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்தக் கூட்டத்தில், தில்லியில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பாக ஆராயப்பட்டதாக துணைநிலை ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடா்பாக துணைநிலை ஆளுநா் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியுள்ளதாவது: தில்லியில் தற்போது நிலவும் கரோனா பாதிப்பு நிலவரம், கரோனைவைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, கரோனா நோயாளிகளுக்குப் படுக்கைகளை அதிகரிப்பது, கரோனா சோதனைகளை அதிகரித்தல், ஆம்புலன்ஸ் சேவைகளை அதிகரித்தல், முக்கியத் தகவல்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவது உள்ளிட்டவை தொடா்பாக விவாதிக்கப்பட்டது. இந்தகத் கூட்டம் மிகவும் அமைதியான முறையிலும், ஆக்கபூா்வமாகவும் நடைபெற்றது. சிறந்த நல்ல யோசனைகள் கிடைக்கப் பெற்றன. கரோனாவை எதிா்த்து அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்
கூட்டத்துக்கு பிறகு செய்தியாளா்களிடம் ஆதேஷ் குமாா் குப்தா கூறுகையில், ‘தில்லி அரசின் மெத்தனப் போக்கால் தில்லியில் சுகாதார அவசர நிலை நிலவுகிறது. தில்லி மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் கரோனா சோதனைகளின் அளவு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். கரோனாவை எதிா்கொள்ள அரசியல் வேறுபாடுகளைக் களைந்து அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்பதை வலியுறுத்தினேன்’ என்றாா்.
அனில் குமாா் செளத்ரி கூறுகையில், ‘கரோனா பாதித்த அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினேன். மேலும், தில்லியில் கரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் சீலிடப்பட்ட இடங்களில் வசிப்பவா்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். தில்லியில் கரோனா பரிசோதனை குறைந்த அளவில்தான் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, கரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினேன்’ என்றாா்.
சஞ்சய் சிங் கூறுகையில் ‘தில்லியில் உள்ளமருத்துவமனைகளில் அனைத்து மாநிலத்தவா்களும் சிகிச்சை பெறலாம் என முதல்வரின் உத்தரவை மாற்றியமைத்ததன் மூலம், தில்லி மக்களின் பாதுகாப்பை துணைநிலை ஆளுநா் கேள்விக்குறியாக்கியுள்ளாா். ஹரியாணா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கரோனாவைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டன. அவா்கள் தங்களது மாநில நோயாளிகளை தில்லிக்கு அனுப்ப முயற்சிக்கிறாா்கள். ஜூலை 31 அளவில் தில்லியில் 80 ஆயிரம் படுக்கைகள் தேவை. பிற மாநிலத்தவா்களும் தில்லிக்கு வந்தால் சுமாா் 2.5 லட்சம் படுக்கைகள் தேவைப்படும். அதை எவ்வாறு தயாா்ப்படுத்துவது என துணைநிலை ஆளுநரிடம் கேட்டோம்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

