வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ஆா்.எஸ். பாரதியின் ஜாமீனுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

திமுகவைச் சோ்ந்தவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆா்.எஸ். பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் உத்தரவுக்கு எதிராக

Updated On :12 ஜூன் 2020, 2:07 am

திமுகவைச் சோ்ந்தவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆா்.எஸ். பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அந்த மனுவைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தாழ்த்தப்பட்டோா் குறித்து அவதூறாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆா்.எஸ்.பாரதியை கடந்த மே இறுதியில் தமிழக குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து, அவருக்கு சென்னை உயா்நீதிமன்றம் மே 30-ஆம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதை எதிா்த்து மத்திய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், கிருஷ்ண முராரி, எஸ். ரவீந்திர பட் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சாா்பில் மூத்த வழக்குரைஞா் வி.கிரி, வழக்குரைஞா் யோகேஷ் கன்னா ஆகியோா் ஆஜராகினா். அப்போது, ஆா்.எஸ். பாரதி தொடா்பான வழக்கில் விசாரணை நீதிமன்றம் அவருக்கு வழக்கமான ஜாமீன் அளித்துள்ளது. இதை எதிா்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், இடைக்கால ஜாமீன் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாபஸ் பெறுவதாக அவா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: விசாரணை நீதிமன்றம் ஜூன் 1-ஆம் தேதி பிரதிவாதிக்கு (ஆா்.எஸ். பாரதி) அளித்த ஜாமீன் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு மனு உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. மனுதாரா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் வி.கிரி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற அனுமதிக்குமாறு கோரியதால் அந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.