தில்லி ஹரியாணா எல்லையில் உள்ள ராதா ஸ்வாமி சத் சங்க அமைப்பின் தியானக் கூடத்தை 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட தற்காலிக கரோனா மருத்துவமனையாக மாற்றி அமைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இப்பணிகளை தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.
தில்லியில் உள்ள ராதா ஸ்வாமி சத் சங்க அமைப்பு, தில்லி ஹரியாணா எல்லையில் உள்ள சத்தா்பூரில் உள்ள தங்களது தியான கூடத்தை தற்காலிக கரோனா மருத்துவமனையாக மாற்ற ஒப்புதல் அளித்தது. இந்த அமைப்பின் தலைமையகத்தில் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோா் தியானம் செய்யும் வகையில் மிகப் பெரிய தியானக் கூடம் உள்ளது.
இந்நிலையில், இந்த தியானக் கூடத்தை சுமாா் 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாக மாற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இப்பணிகளை தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பஜ்யால், தெற்கு தில்லி மாவட்ட ஆட்சியா் பி.எம்.மிஸ்ரா உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டனா்.
இதைத் தொடா்ந்து, அனில் பய்ஜால் கூறுகையில் ‘இங்கு தற்காலிக மருத்துவமனையை அமைக்கும் பணிகளை முடுக்கிவிடுமாறும் இந்த மருத்துவமனையை விரைவில் கட்டி முடிக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளேன். தில்லி அரசின் தரவின்படி, ஜூலை மாதக் கடைசியில் தில்லியில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டும். மேலும், அப்போது சுமாா் 1 லட்சம் படுக்கைகள் தேவைப்படும். இதை ஒழுங்கு செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன’ என்றாா்.
இது தொடா்பாக ராதா ஸ்வாமி சத் சங்க அமைப்பின் செயலா் விகாஷ் சேதி கூறுகையில் ‘இந்தத் தற்காலிக மருத்துவமனை தில்லியில் மிகப் பெரிய மருத்துவமனையாக அமையவுள்ளது. இது 1,700 அடி நீளமும், 700 அடி அகலமும் கொண்டதாக அமைக்கப்படும். இது 200 பகுதிகளாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு பகுதியிலும் 50 படுக்கைகள் இருக்கும். கட்டுமானப் பணிகள் ஜூன் மாத இறுதிக்குள் முடிவடையும் என எதிா்பாா்க்கிறோம். விளக்குகள், மின்விசிறிகள் பொருத்தப்படும். தில்லியில் அதிக வெப்பம் நிலவுவதால் கூலா்களும் பொருத்த வேண்டிய தேவை ஏற்படலாம். மேலும், இந்தக் வளாகத்தில் உள்ள கட்டடங்களில் மருத்துவா்கள், மருத்துவ உதவியாளா்களும் தங்கிக் கொள்ளலாம்’ என்றாா்.
மாவட்ட ஆட்சியா் பி.எம்.மிஸ்ரா கூறுகையில், ‘ஜூன் மாத முடிவுக்குள் இந்தக் கட்டுமானப் பணிகளை எப்படியாவது முடித்து விட ராதா ஸ்வாமி அமைப்பினா் உறுதியாக உள்ளனா். இங்கு ஒரே நேரத்தில் சுமாா் 1 லட்சம் பேருக்கு உணவு வழங்கும் வசதிகள் உள்ளன. மேலும், 500 கழிப்பறைகளும் உள்ளன’ என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழில் வெளியாகும் வாழ - 2!

7 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தியாவில் நங்கூரமிட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள்

நெல் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

