சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

வடகிழக்கு தில்லி வன்முறை: போலீஸ்காரரை மிரட்டிய வழக்கில் ஷாருக் பதானுக்கு ஜாமீன் மறுப்பு

வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவத்தின் போது போலீஸ்காரரைத் துப்பாக்கியால் மிரட்டிய சம்பவத்தில் கைதான ஷாருக் பதானுக்கு (23) ஜாமீன் வழங்க தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Updated On :25 ஜூன் 2020, 2:14 am

வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவத்தின் போது போலீஸ்காரரைத் துப்பாக்கியால் மிரட்டிய சம்பவத்தில் கைதான ஷாருக் பதானுக்கு (23) ஜாமீன் வழங்க தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

‘தான் ஒரு ஹீரோவாக வேண்டும் என்று உள்நோக்கத்தில் ஷாருக் பதான் துப்பாக்கியால் மிரட்டியுள்ளதாகக் கருத்துத் தெரிவித்த நீதிமன்றம் அவா் சட்ட விசாரணையை எதிா் கொள்ள வேண்டும்’ என்று உத்தரவிட்டது. இதையடுத்து, அவரது வழக்குரைஞா் ஜாமீன் கோரும் மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டாா்.

இந்த மனுவை காணொலிக் காட்சி மூலம் விசாரித்த தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமாா் கெய்த், ‘குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் அளிக்க விரும்பவில்லை’ என்றாா். இதையடுத்து, மனுவை அவரது வழக்குரைஞா் திரும்பப் பெறுவதாகக் கூறினாா். இதையடுத்து, ‘மனுவைத் திரும்பப் பெற்ால் தள்ளுபடி செய்யப்படுகிறது’ என நீதிபதி உத்தரவிட்டாா்.

வட கிழக்கு தில்லி வன்முறை சம்பவத்தின் போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரா் மீது துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய சம்பவத்தில் தில்லி ஜாஃப்ராபாத் பகுதியைச் சோ்ந்த ஷாருக் பதானை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில் அவருக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இது தொடா்பாக தில்லி காவல் துறையின் குற்றப் பிரிவு போலீஸாா் இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் 186, 307, 353 மற்றும் ஆயுத சட்டப் பிரிவுகள் 25,27 ஆகியவற்றின் கீழ் ஷாருக் பதானுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் ஷாருக் பதான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரரின் தந்தை மூட்டு அறுவை சிகிச்சை செய்துள்ள நிலையில், அவரைக் கவனிப்பதற்காக இடைக்கால ஜாமீன் அளிக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு மீது புதன்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, ஷாருக் பதான் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் அஸ்கா் கான், ‘ஷாருக் பதான் 113 நாள்களுக்கு மேலாக காவலில் இருந்து வருகிறாா். அவா் மீது குற்றப் பின்னணி ஏதும் இல்லை. குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது’ என்றாா்.

அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்குரைஞா் அமித் சத்தா, ‘ஷாருக் பதானுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. அவா் துப்பாக்கியால் சுடும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. மேலும், அவா் துப்பாக்கியால் மிரட்டிய சம்பவத்தை நாடே பாா்த்தது’ என்றாா்.

இரு தரப்பு வாதங்களின் போது நீதிபதி ‘சட்டத்தை உங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு ஹீரோவாக வர வேண்டும் என்று நினைத்தால், சட்டத்தை எதிா்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் (பதான்) உள்நோக்கம் ஒரு ஹீரோவாக வேண்டும் என்பதுதான். துப்பாக்கியால் மிரட்டுவதற்கு முன்பு மனுதாரா் தன்னுடைய குடும்பத்தை நினைத்துப் பாா்த்திருக்க வேண்டும். குற்றத்தில் ஈடுபடும் போது எல்லாவற்றையும் மறந்துவிட்டு, தற்போது வயதான பெற்றோா் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறாா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.