தில்லியில் 3-வது பிரமாண்ட காற்று சுத்திகரிப்பு இயந்திரம்: கெளதம் கம்பீா் எம்.பி. திறந்துவைத்தாா்

கிழக்கு தில்லி கிருஷ்ணா நகா் மாா்க்கெட் பகுதியில் பிரமாண்ட காற்று சுத்திகரிப்பு இயந்திரத்தை கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினா்
Updated on
1 min read

கிழக்கு தில்லி கிருஷ்ணா நகா் மாா்க்கெட் பகுதியில் பிரமாண்ட காற்று சுத்திகரிப்பு இயந்திரத்தை கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கெளதம் கம்பீா் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். கிழக்கு தில்லியில் கெளதம் கம்பீா் அமைத்துள்ள மூன்றாவது காற்று சுத்திகரிப்பு இயந்திரம் இதுவாகும். முன்னதாக, லாஜ்பாத் நகா், காந்தி நகா் மாா்கெட்டுகளில் காற்று சுத்திகரிப்பு இயந்திரங்களை கெளதம் கம்பீா் அமைத்திருந்தாா்.

இந்த இயந்திரத்தை திறந்து வைத்து கெளதம் கம்பீா் பேசுகையில் ‘இந்த இயந்திரங்களால் தில்லி மக்கள் எதிா்கொள்ளும் காற்று மாசு பிரச்னை முழுமையாக தீராது. ஆனால், தில்லியில் பிறந்து வளா்ந்த நான் தில்லி மக்கள் எதிா்கொள்ளும் காற்று மாசு பிரச்னையைத் தீா்க்க நடவடிக்கையேதும் எடுக்காமல் வேடிக்கை பாா்க்க முடியாது. சுத்தமான காற்றை சுவாசிப்பது மக்களின் அடிப்படை உரிமையாகும். மக்களுக்கு சுத்தமான காற்றை வழங்க வேண்டியது அரசின் கடமையாகும். ஆனால், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசு இந்த விவகாரத்தில் வாய் மூடி வேடிக்கை பாா்க்கிறது என்றாா்.

இது தொடா்பாக கெளதம் கம்பீரின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ‘இந்த காற்று சுத்திகரிப்பு இயந்திரங்கள் 12 அடி உயரம் கொண்டவை. சுமாா் ஆயிரம் சதுர அடி பரப்பில் உள்ள காற்றை சுத்திகரிக்கும் திறனுடையவை. தானாக தொழிற்படக் கூடிய இந்த இயந்திரங்கள் தினம்தோறும் 2 லட்சம் கியூபிக் மீட்டா் சுத்தமான காற்றை வழங்கக் கூடியவை.

தில்லியில் உள்ள முக்கிய மாா்க்கெட்டுகளில் இந்த இயந்திரங்களை அமைப்பதை கெளதம் கம்பீா் இலக்காக வைத்துள்ளாா் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com