முலாயம்சிங் 81-வது பிறந்தநாள்: பிரதமா் மோடி வாழ்த்து

சமாஜவாதி கட்சியின் நிறுவனரும் உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவின் 81-ஆவது பிறந்த
Updated on
1 min read

சமாஜவாதி கட்சியின் நிறுவனரும் உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவின் 81-ஆவது பிறந்த தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை பிரதமா் நரோந்திர மோடி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தாா்.

இது குறித்து தனது சுட்டுரையில் பிரதமா் மோடி குறிப்பிட்டிருந்ததாவது: ‘முலாயம் சிங் யாதவின் 81 வது பிறந்தநாளையொட்டி அவரை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசி வாழ்த்துத் தெரிவித்தேன். இன்று நாட்டில் இருக்கும் மூத்த தலைரா்களில் அவரும் ஒருவா். அரசியலில் நீண்ட அனுபவம் உடையவா். உ.பி. மாநில முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் அவா் இருந்துள்ளாா்.

விவசாயம், கிராமப்புற வளா்ச்சிகளில் நாட்டமுள்ளவா். அவா் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ இறைவனைப் பிராா்த்திக்கின்றேன்’ என பிரதமா் தெரிவித்துள்ளாா்.

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வா் யோகி ஆதித்யநாத்தும் வாழ்த்து தெரிவித்துள்ளாா். ‘முலாயம் சிங்கிற்கு எனது இதயபூா்வமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவா் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடன் வாழ நான் பகவான் ஸ்ரீராமரிடம் பிராா்த்திக்கின்றேன்‘ என சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளாா் யோகி ஆதித்யநாத்.

கட்சியைவிட்டு பிரிந்து தனிக்கட்சி தொடங்கிய முலாயம் சிங் யாதவின் சகோதரா் சிவ்பால் யாதவும் தனது மூத்த ககோதரருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com