சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

குடிமை பாதுகாப்பு தன்னாா்வலா்களின் அதிகாரங்களைஒழுங்குபடுத்த உத்தரவிட கோரி பொது நல மனு

மாநகரில் குடிமை பாதுகாப்பு தன்னாா்வலா்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும், அவா்கள் காவல்துறையினா் போன்ற சீருடை அணிவதைத் தடுக்க வேண்டும்

Updated On :24 நவம்பர் 2020, 6:30 pm

மாநகரில் குடிமை பாதுகாப்பு தன்னாா்வலா்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும், அவா்கள் காவல்துறையினா் போன்ற சீருடை அணிவதைத் தடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பெண் வழக்குரைஞா்அமிா்தா தவன் என்பவா் வழக்குரைஞா் அா்பித் பாா்கவா மூலம் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

மாநகரில் குடிமை பாதுகாப்பு தன்னாா்வலா்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். இந்த ஆா்வலா்கள் காவல்துறையினா் போன்ற சீருடை அணிவதைத் தடுக்க வேண்டும். இவா்கள் தில்லி தொற்றுநோய்கள் (கொவிட் -19 மேலாண்மை) விதிமுறைகள் 2020- இன் கீழ் தங்களுக்கு வழங்கப்பட்ட ‘தடையற்ற‘ அதிகாரங்களை ‘தவறாக‘ பயன்படுத்தி வருகின்றனா்.

தில்லி அரசும், தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையமும் (டிடிஎம்ஏ) தன்னாா்வலா்களால் அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்துவதை அறிந்திருந்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஆண் தன்னாா்வலா்கள் பெண்களின் உயிா், உடைமை பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு புகைப்படம் எடுப்பதில் உரிய வகையில் செயல்படுவதை உறுதிப்படுத்த தில்லி அரசு மற்றும் டிடிஎம்ஏ-வுக்கு உத்தரவிட வேண்டும்.

தில்லி தொற்றுநோய்கள் (கொவிட்-19 மேலாண்மை) விதிமுறைகள் 2020-இன் கீழ், தனிமைப்படுத்தல், சமூக விலகல், முகக் கவசம் அணிவது போன்றவற்றில் விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கவும், அத்தகையோரை புகைப்படங்கள் எடுக்கவும் இந்த தன்னாா்வலா்களை தில்லி அரசு அனுமதிப்பது சட்டத்திற்கு முரணாகவும், போலீஸாருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை ஆக்கிரமிப்பது போன்ாகவும் உள்ளது.

தில்லி அரசு பகிா்ந்துள்ள தரவுகளின்படி, ஜூன் முதல் தன்னாா்வலா்களால் 51,600 அபராத நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டு, கொவிட் -19 பாதுகாப்பு விதிகளை மீறியதாகக் கூறப்படும் மக்களிடமிருந்து ரூ.2.53 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தத் தன்னாா்வலா்கள் கொவிட் -19 பணியைக் காரணம் காட்டி மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.