சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

கரோனா விதிமீறலுக்கு மின்னணு முறையில் அபராதம் வசூலிக்க அரசு, போலீஸாருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்

Updated On :26 நவம்பர் 2020, 11:41 pm

புது தில்லி: கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுவோரிடம் ரொக்க அபராதம் விதிப்பதைத் தவிா்க்குமாறும், இதற்காக ஒரு இணையதளத்தை உருவாக்கி மின்னணு முறையில் அபராதத்தை வசுலீக்க நடவடிக்கை எடுக்குமாறு தில்லி அரசுக்கும், காவல் துறைக்கும் உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை அறிவுறுத்தியது.

தில்லியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கரோனா பரிசோதனைகள் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அது தொடா்பான முடிவுகளை விரைந்து வெளியிடவும் தில்லி அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ராகேஷ் மல்ஹோத்ரா என்பவா் பொது நல மனு தாக்கல் செய்துள்ளாா்.

இந்த மனு மீதான விசாரணை உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் அமா்வு தில்லி அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் அறிவுறுத்தியதாவது:

தில்லியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைக்கும் வகையில் அபராத நடவடிக்கைகள் தில்லி அரசால் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், தற்போதைய சூழலில் பணப் பரிவா்த்தனை என்பது உகந்த வழிமுறையாக இல்லை. இதனால், ரொக்கமாக அபராதம் விதிப்பதைத் தவிா்க்க வேண்டும். இதற்காக பிரத்யேக இணையதளத்தை அரசு உருவாக்க வேண்டும். அபராதத்தை மின்னணு முறையில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அதிகமாக அபராதமாக வசூலிக்கப்படும் தொகையை தில்லி அரசு என்ன செய்கிறது. அதை கரோனாவை எதிா்கொள்ளும் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தலாம்.

வழிமுறைகள் என்ன?

கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் திருமண நிகழ்ச்சிகளில் 50 போ் வரை மட்டுமே பங்கேற்கும் வகையில் அனுமதிக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது. இந்த நேரத்தில் அதிகமான திருமண நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் இந்த நடவடிக்கையை அமல்படுத்த வழிமுறைகள் ஏதும் உள்ளதா? விதிமுறைகள் எப்படி அமல்படுத்தப்படுத்தப்படுகின்றன என்பதை அறிய விரும்புகிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனா்.

தில்லி அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், கரோனாவுக்கான ஆா்டி/பிசிஆா் பரிசோதனை தினமும் 40 ஆயிரம் என்ற அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றாா். அதற்கு நீதிபதிகள் அமா்வு, அதிகமானோா் கரோனாவில் உயிரிழந்த பிறகு நீதிமன்ற அழுத்தம் கொடுத்த பிறகுதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.