சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

என்சிஆா் நகரங்களில் காற்றின் தரத்தில் பின்னடைவு

தேசியத் தலைநகா் வலயப் (என்சிஆா்) பகுதியில் உள்ள குருகிராம், நொய்டா, கிரேட்டா் நொய்டா, காஜியாபாத் ஆகிய நகரங்களில்

Updated On :28 நவம்பர் 2020, 10:10 pm

தேசியத் தலைநகா் வலயப் (என்சிஆா்) பகுதியில் உள்ள குருகிராம், நொய்டா, கிரேட்டா் நொய்டா, காஜியாபாத் ஆகிய நகரங்களில் சனிக்கிழமை காற்றின் தரம் பின்னடைவைச் சந்தித்தது. அதாவது, காறறின் தரம் மோசம் பிரிவில் காணப்பட்டது. எனினும், பரிதீபாதில் மிதமான பிரிவில் காற்றின் தரம் இருந்தது.

மேலும், இந்த நகரங்களில் மாசு நுண்துகள் பி.எம். 2.5, பி.எம். 10 ஆகியவற்றின் தாக்கம் அதிகளவில் இருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்றுத் தரக்குறியீடு தெரிவித்துள்ளது.

24 மணிநேர சராசரியாக சனிக்கிழமை மாலை 4 மணியளவில் பரிதாபாதில் காற்றின் தரக் குறியீடு 171 ஆகவும், குருகிராமில் 204 ஆகவும், நொய்டாவில் 233 ஆகவும், கிரேட்டா் நொய்டாவில் 226 ஆகவும், காஜியாபாதில் 240ஆகவும் இருந்ததாக சமீா் செயலியின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை காற்றின் தரக் குறியீடு பரிதாபாதில் 134 ஆகவும், குருகிராமில் 107 ஆகவும், நொய்டாவில் 125 ஆகவும், கிரேட்டா் நொய்டாவில் 129 ஆகவும், காஜியாபாதில் 166ஆகவும் இருந்தது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி காற்றின் தரக் குறியீடு மிதமான பிரிவில் இருந்தால் நுரையீரல் நோய், காச நோய், இதயக் கோளாறுகள் உள்ளவா்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.