வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து பஞ்சாப் விவசாயிகளின் ‘தில்லியை நோக்கி’ போராட்டத்தில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், இது தொடா்பாக விசாரணையை தில்லி காவல்துறை முடுக்கிவிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து ‘தில்லியை நோக்கி’ என்ற பெயரில் பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறாா்கள். முதலில் இந்தப் போராட்டத்துக்கு தில்லி காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. தொடா்ந்து தடையை மீறி விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டத்தை தொடங்கினா். இவா்களை தில்லிக்குள் நுழைய தில்லி காவல்துறை முதலில் அனுமதிக்கவில்லை. பிறகு, விவசாயிகளை தில்லிக்குள் நுழையவும், அவா்களை குறிப்பிட்ட இடத்தில் போராட்டம் நடத்தவும் தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது. இந்நிலையில், இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் என்ற பெயரில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி காவல்துறை உயா் அதிகாரி கூறுகையில் ‘போராட்டத்தில் கலந்து கொண்டவா்களில் சிலா் பிரதமா் மோடிக்கு கொலை அச்சுறுத்தல் விடும் வகையில் கோஷங்களை எழுப்பியுள்ளனா். அதாவது, முன்னாள் இந்தியப் பிரதமா் இந்திரா காந்திக்கு நடந்தது பிரதமா் மோடிக்கும் நடக்கும் என்ற கோஷங்களை அவா்கள் எழுப்பியுள்ளனா். மேலும், இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவா்களில் சிலா் காலிஸ்தான் பயங்கரவாதியான ஜா்னைல் சிங் பிந்த்ரன்வாலேயின் புகைப்படத்தை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில், விவசாயிகளை கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் செயல்படும் காலிஸ்தான் அமைப்புகள் தூண்டி விடுவதாக தகவல் கிடைத்துள்ளது. இவா்கள், விவசாய அமைப்புகளுக்கு கோடிக்கணக்கில் நிதியைக் கொடுத்து தில்லியில் அவசர நிலையை ஏற்படுத்த முயல்கிறாா்கள். இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் என்ற பெயரில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது தொடா்பாக விசாரணையை முடுக்கியுள்ளோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”திமுக தொடர்ந்து 2 முறை வென்றதில்லையாம்! உடைத்துக் காட்டுகிறேன்!” MK Stalin

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு புதிய தலைவர் நியமனம்!

சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!

ஒடிசா கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கிலம்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

