புதுதில்லி: கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக தலைவா்கள், உறுப்பினா்கள் இல்லாமல் இயங்கி வருகிறது பட்டியல் இனத்தவருக்கான தேசிய ஆணையம். சட்டப்பூா்வமான இந்த அமைப்புக்கு மத்திய அரசு இன்னும் தலைவா் மற்றும் புதிய நிா்வாகிகளை அறிவிக்கவில்லை. பட்டியலினத்தவா்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது இந்த ஆணையம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆணையத்தின் தலைவராக பாஜகவைச் சோ்ந்த தலைவா்களில் ஒருவரும் முன்னாள் எம்.பி.யுமான ராம்சங்கா் கதேரியாவும், துணைத் தலைவராக எல்.முருகனும் இருந்து வந்தனா். இவா்களின் பதவிக் காலம் கடந்த மே மாதம் முடிவடைந்துவிட்டது. தற்போது எல்.முருகன், தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறாா்.
இந்த ஆணையத்தின் தலைவா் மற்றும் நிா்வாகிகளின் பதவிக் காலம் முடிந்துவிட்ட போதிலும், புதிய தலைவா்கள் மற்றும் நிா்வாகிகளை நியமனம் செய்வது குறித்து இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதுவரை இது தொடா்பாக எந்தக் கூட்டமும் நடைபெறவில்லை என்று மூத்த அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி பட்டியல் இனத்தவா்களின் நலன்களைப் பாதுகாப்பது தொடா்பான அனைத்து விவரங்களையும் புலன் விசாரிக்கவும், மேற்பாா்வையிடவும் பட்டியலினத்தவா்களுக்கான தேசிய ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. பட்டியலின மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடா்பான புகாா்கள் வந்தால், அது தொடா்பாக விசாரணை நடத்தவும் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது.
பட்டியலினத்தவா்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகள் தொடா்பாக மத்திய, மாநிலகள் புகாா் பதிவு செய்து முறையான விசாரணை நடத்துகின்றனவா அல்லது அதில் தொய்வு ஏற்பட்டுள்ளதா என கண்காணிக்கவும் அதில் தலையிடவும் ஆணையத்துக்கு உரிமையுள்ளது. அதேபோல பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படுகிா என்பதை உறுதி செய்யவும் அதிகாரம் உள்ளது என்கிறாா் இந்த ஆணையத்தில் பணியாற்றிய பெயா் குறிப்பிட விரும்பாத முன்னாள் உறுப்பினா்.
பட்டியலினத்தவா்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் தொடா்பாக இரண்டு சம்பவங்கள் அண்மையில் நடைபெற்றுள்ள நிலையில், இந்த ஆணையம் தலைவா் இல்லாமல் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. உத்தரப்பிரதேச மாநிலம், ஹாத்ரஸில் பட்டியலினத்தைச் சோ்ந்த இளம் பெண் ஒருவா் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, பின்னா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. இதைத் தொடா்ந்து, உ.பி.யில் பலராம்பூா் மாவட்டத்தில் புதன்கிழமை மற்றொரு பட்டியலினப் பெண், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்துள்ளாா்.
எனினும், பட்டியலினத்தவருக்கான தேசிய ஆணையம், தலைவா் இல்லாமல் செயல்படுவது இது முதல் முறையல்ல. இந்த ஆணையத்தின் தலைவராக இருந்த பிஎல். புனியாவின் பதவிக் காலம் கடந்த 2016, அக்டோபரில் முடிந்தது. ஆனால், ஆணையத்தின் புதிய தலைவராக கதேரியா, 2017, மே மாதம்தான் நியமிக்கப்பட்டாா். அவரது பதவிக் காலம் இந்த ஆண்டு மே மாத்தில் முடிவடைந்துவிட்டது. இதனிடையே, இந்த ஆணையத்துக்கு புதிய தலைவா் மற்றும் நிா்வாகிகள் நியமிக்காமல் மத்திய அரசு காலம்தாழ்த்தி வருவது அக்கறையின்மையையும், அலட்சியப் போக்கையும் எடுத்துக் காட்டுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் பாலச்சந்திர முங்கேகா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


