கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

பயறு உப்புமா

ரவையை வாசனை வரும் வரை வறுத்தெடுக்கவும்.

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 4:10 am IST

தேவையான பொருள்கள்:

முளை கட்டிய பச்சைப் பயறு, பொடியாக அரித்த பசலைக்கீரை-தலா 1 கிண்ணம்

ரவை- முக்கால் கிண்ணம்

தக்காளி- 4

பச்சை மிளகாய்- 2

கடுகு- 1 தேக்கரண்டி

மிளகுத்தூள்- அரை தேக்கரண்டி

எலுமிச்சைச்சாறு- அரை மூடி

உப்பு, தண்ணீர், எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

ரவையை வாசனை வரும் வரை வறுத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, அதில் தக்காளி, விதை நீக்கி நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பின்னர்

பச்சைப்பயறு, பசலைக்கீரை, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். தண்ணீர் சேர்த்து வேகவிட்டு எலுமிச்சைச் சாறை விடவும். கடைசியாக ரவை கலந்து கிளறி வெந்தவுடன் இறக்கினால் போதும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.